எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.. நாள் முழுவதும் முடங்கிய ராஜ்யசபா.. முத்தலாக் தாக்கல் இல்லை
டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப் பட்ட ராஜ்யசபா பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. அதனால் இன்று முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.
முத்தலாக் நடைமுறையை தடை செய்யும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைப் பாதுகாப்புச் சட்ட மசோதா லோக்சபாவில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 245 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் கிடைத்தன.
வாக்கெடுப்புக்கு முன்பு இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், அஇஅதிமுக, திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் லோக் சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தன. அதையடுத்து, ராஜ்யசபாவிலும் சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருந்தார். அதனை முன்னிட்டு எம்.பி.க்கள் அனைவரும் கண்டிப்பாக திங்கள்கிழமை அவைக்கு வர வேண்டும் என்று பாஜக தலைமை அறிவுறுத்தியிருந்தது.

ராஜ்யசபாவில் அமளி
ஏற்கனவே அறிவித்தபடி ராஜ்யசபா கூடியது. அப்போது அவையில் இருந்த அதிமுக எம்பிக்கள் மேகதாது அணை விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் வலியுறுத்தியும் அவர்கள் தொடர்ந்து அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்த வண்ணம் இருந்தனர்.

தள்ளி வைக்கப்பட்ட ராஜ்யசபா
இதையடுத்து ராஜ்யசபா தொடங்கிய சிறிது நேரத்திலேயே மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவையானது மதியம் 2 மணிக்கு கூடியது. அப்போது நாடாளு மன்ற தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்காமல் முத்தலாக் மசோதாவுக்கு சட்ட வடிவம் கொடுக்க முயற்சிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பேசினார்.

எதிர்க்கட்சி எம்பிக்கள் பேச்சு
இந்த மசோதா பல கோடி முஸ்லிம்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதே கருத்தை வலியுறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி டெரெக் ஓ பிரியனும் பேசினார். அவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். அதனால், 15 நிமிடங்களுக்கு அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.

அமளியால் அவை ஒத்திவைப்பு
மீண்டும் அவை அதன்பின்னரும், பல்வேறு பிரச்சனைகளை மையப்படுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, வரும் 2ம் தேதிவரை ராஜ்யசபா ஒத்திவைக்கப்படுவதாக துணை சபாநாயகர் அறிவித்தார்.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications