அரசியலை விடுங்கள்.. மாணவர்களின் நலனுக்காக செயல்படுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் அட்வைஸ்
டெல்லி: மாணவர்களின் கல்வியாண்டை நாம் காப்பாற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கேட்டுக் கொண்டுள்ளார்.
நீட் தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசும் நீட் தேர்வை நடத்தக் கூடாது என சில கல்வியாளர்களும், எதிர்க்கட்சியினரும் மாணவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இது போல் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் இதுகுறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறுகையில் நம் வாழ்க்கை அனைத்தையும் கடந்து போகத்தான் வேண்டும்.
மாணவர்களின் நலனை நீண்ட நாளுக்கு தொங்கலில் விட முடியாது. முழு கல்வியாண்டும் வீணாகக் கூடாது. நாடாளுமன்றம் இயங்குகிறது, அலுவலகங்கள் இயங்குகின்றன, அவ்வாறிருக்கையில் தேர்வுகள் மட்டும் ஏன் நடத்தக் கூடாது? மாணவர்களின் வாழ்வில் கல்வியே இல்லாத ஒரு ஆண்டு இருக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
மாணவர்கள், பெற்றோர் கோரிக்கைகள், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நான் கேட்டுக் கொள்வது எல்லாம் ஒன்றுதான். மாணவர்களின் கல்வியாண்டை நாம் பாதுகாக்க வேண்டும். மாணவர்களின் நலன் கருதி நாம் நடந்து கொள்ள வேண்டும். அரசியலுக்கு அப்பால், நான் ஒன்றை சொல்கிறேன்.
8.58 லட்சம் பேர் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 7.41 லட்சம் பேர் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. வெறும் 332 மாணவர்கள் மட்டுமே தேர்வு மையத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள். அது போல் நீட் அனுமதி சீட்டுகளை வெளியிட்ட முதல் 5 மணி நேரத்தில் விண்ணப்பித்த 15.97 லட்சம் பேரில் 6.84 லட்சம் பேர் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொண்டனர் என்றார்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications