ஆர்பிஐ கவர்னர் ஓர் ஊழல்வாதி.. குருமூர்த்தி நியமனம் தவறு.. குற்றச்சாட்டுகளை அடுக்கும் சு.சாமி!
ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கும் சக்திகாந்த தாஸ் ஒரு ஊழல்வாதி என்று சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கும் சக்திகாந்த தாஸ் ஒரு ஊழல்வாதி என்று பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சக்திகாந்த தாஸுக்கு எதிராக பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடந்த ஸ்கூல் ஆப் பிசினஸ் கல்லூரி விழாவில் பேசிய சுப்பிரமணிய சுவாமி ஆர்பிஐ குறித்து பல விவரங்களை தெரிவித்தார்.

ஊழல்வாதி
சுப்பிரமணிய சுவாமி தனது பேச்சில், ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கும் சக்திகாந்த தாஸ் ஒரு ஊழல்வாதி. அவரது நியமனம் தவறு. அவருக்கு எதிராக நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளது. நான் இருக்கும் போது சக்திகாந்த தாஸ் பொருளாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் அவரை போய் ஆர்பிஐ கவர்னராக நியமித்துள்ளனர்.

சென்னையில் சிதம்பரம்
அவர் ப.சிதம்பரத்தின் செல்லப்பிள்ளை. ப.சிதம்பரத்தின் ஊழல்களுக்கு சக்திகாந்த தாஸ் துணை போய் இருந்தார். சில வழக்குகளில் இருந்து ப.சிதம்பரத்தை வெளியே கொண்டு வர சக்திகாந்த தாஸ் உதவி செய்ய முயற்சி செய்தார். சென்னையில் இருந்த போது சக்திகாந்த தாஸ் பல ஊழல்களை செய்துள்ளார்.

குருமூர்த்தி ஏன்
அதேபோல் எஸ்.குருமூர்த்தி ஆர்பிஐ இயக்குனர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டதற்கும் சுப்பிரமணிய சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எஸ்.குருமூர்த்தி ஆர்பிஐ அமைப்பில் இருக்க தகுதி வாய்ந்தவர் கிடையாது. அவரை ஆர்பிஐ இயக்குநராக்கியது பெரிய குற்றம் என்று கூறியுள்ளார்.

யார் வர வேண்டும்
மேலும் ஆர்பிஐ இயக்குனராக யார் வர வேண்டும் என்றும் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். அதில் ''முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினரான ஐஐஎம் பெங்களூரில் பேராசிரியராக இருக்கும் ஆர். வைத்தியநாதன்தான் ஆர்பிஐ கவர்னர் ஆக வேண்டும். அவர் நல்ல புத்திசாலி, அதேபோல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தவர். அவர் நம்முடைய ஆள், அதனால் அவர்தான் ஆர்பிஐ கவர்னராக வேண்டும்'' என்று சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications