ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு! அப்போ ஹோம் லோன் என்னவாகும்? மேஜர் தகவல்
டெல்லி: இன்றைய தினம் ரிசர்வ் வங்கி கூட்டம் நடந்த நிலையில், அதில் ரெப்போ வட்டி விகிதம் 5.50%ஆக மாற்றம் இல்லாமல் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தகத்தில் நிச்சயமற்ற சூழலில் நிலவி வரும் நிலையில், இந்த முடிவை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஏற்கனவே கடந்த கூட்டங்களில் ரெப்போ வட்டி குறைக்கப்பட்ட நிலையில், இந்த முறையும் ரெப்போ வட்டி குறைக்கப்படலாம் என்று சிலர் எதிர்பார்த்தனர். இருப்பினும், வட்டி விகிதம் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்த அறிவிப்பை வெளியிட்டார். உலகளாவிய வர்த்தகத்தில் நிச்சயமற்ற தன்மைகள் அதிகரித்துவரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் ரெப்போ வட்டி விகிதம் கணிசமாகக் குறைக்கப்பட்ட நிலையில், அதன் நன்மைகளைப் பாதுகாக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ரிசர்வ் வங்கி குழு, ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளது.
கடந்த காலங்களில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் ஹோம் லோன், பெர்சனல் லோன் வாங்குவோரின் இஎம்ஐ சுமை கணிசமாகக் குறைந்தது. ஆனால், இந்த முறை மாற்றம் எதுவும் செய்யப்படாததால் இஎம்ஐ தொகை குறையாது.












Click it and Unblock the Notifications