தமிழகம் உட்பட நாடு முழுக்க எந்த மாவட்டங்கள் சிவப்பு, மஞ்சள், பச்சை மண்டலத்தில் உள்ளன? முழு லிஸ்ட்
டெல்லி: மத்திய அரசு கொரோனா பரவல் குறித்த சிவப்பு மண்டல ஹாட்ஸ்பாட்டுகளை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை உள்பட 130 மாவட்டங்கள் உள்ளன.
மத்திய சுகாதார அமைச்சகம், இந்தியா முழுவதும் 733 மாவட்டங்களை, கொரோனா பாதிப்பு நிலவரத்தை வைத்து, சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாக பிரித்துள்ளது.
டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் அகமதாபாத் ஆகியவையும், சிவப்பு மண்டல பட்டியலில் உள்ளன.
சிவப்பு மண்டலம் மாவட்டங்கள்: சென்னை, மதுரை, விருதுநகர், நாமக்கல், தஞ்சாவூர் , செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளது.
மக்களே.. தமிழகத்தில் எவையெல்லாம் ரெட், ஆரஞ்சு, பச்சை ஜோன்கள்.. வெளியானது லிஸ்ட்!
ஆரஞ்சு மண்டலம்: தேனி, தென்காசி, நாகை, திண்டுக்கல், விழுப்புரம், கோவை, கடலூர், சேலம், கரூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், நெல்லை, நீலகிரி, சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, தருமபுரி, திருச்சி ஆகிய 24 மாவட்டங்கள்.
பச்சை மண்டலம்: கிருஷ்ணகிரி மாவட்டம். ஏனெனில் இங்கு ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை
நாடு முழுக்க எந்தெந்த மாவட்டங்கள் இந்த பட்டியலில் உள்ளன என்பது பற்றிய அறிக்கையை இங்கே பார்த்து நீங்களே அறிந்து கொள்ளலாம்.