தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு.. சமூக நீதி மாநாட்டில் திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கை
டெல்லி: பாஜக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார் மயம் ஆகி வருகின்றன. எனவே, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கொள்கையை விரிவு படுத்த வேண்டும் என்று சமூக நீதி மாநாட்டில் தொல் திருமாவளவன் பேசினார்.
மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் சிதறுவதால் வாக்குகள் பிரிந்து அது பாஜகவிற்கே சாதகமாக இருக்கும் என்றும் தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்தச் சூழலில் சமூக நீதிக்கான அகில இந்தியக் கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று டெல்லியில் நடைபெற்றது.

இன்று மாலை 4.30 மணிக்கு துவங்கி, 7.00 மணி வரை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இந்த மாநாடு நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்த இந்த மாநாட்டில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி உள்பட 18 தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மநாட்டில் உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், இந்தியாவில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று பேசினார். இது தொடர்பாக திருமாவளவன் மேலும் கூறுகையில், "பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மக்களுக்கான இட ஒதுக்கீடு சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும். பாஜக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார் மயம் ஆகி வருகின்றன. எனவே, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கொள்கையை விரிவு படுத்த வேண்டும்" என்றார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications