தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு.. சமூக நீதி மாநாட்டில் திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கை
டெல்லி: பாஜக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார் மயம் ஆகி வருகின்றன. எனவே, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கொள்கையை விரிவு படுத்த வேண்டும் என்று சமூக நீதி மாநாட்டில் தொல் திருமாவளவன் பேசினார்.
மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் சிதறுவதால் வாக்குகள் பிரிந்து அது பாஜகவிற்கே சாதகமாக இருக்கும் என்றும் தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்தச் சூழலில் சமூக நீதிக்கான அகில இந்தியக் கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று டெல்லியில் நடைபெற்றது.

இன்று மாலை 4.30 மணிக்கு துவங்கி, 7.00 மணி வரை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இந்த மாநாடு நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்த இந்த மாநாட்டில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி உள்பட 18 தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மநாட்டில் உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், இந்தியாவில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று பேசினார். இது தொடர்பாக திருமாவளவன் மேலும் கூறுகையில், "பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மக்களுக்கான இட ஒதுக்கீடு சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும். பாஜக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார் மயம் ஆகி வருகின்றன. எனவே, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கொள்கையை விரிவு படுத்த வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications