திருமாவளவன் கனவில் நிலநடுக்கம்.. தேஜ்பிரதாப் யாதவ் கனவில் வந்த கடவுள் கிருஷ்ணர்- பரபர வீடியோ!
டெல்லி: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கனவில் நிலநடுக்கம் கண்ட மறுநாளே டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது என விசிக எம்பி ரவிக்குமார் கூறியிருந்தார். இந்த வரிசையில் லாலு பிரசாத் மகனும் பீகார் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ், தமது கனவில் கடவுள் கிருஷ்ணரை கண்டதாக ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலையை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.8 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வட இந்தியாவின் பகுதிகள் அதிர்ந்தன.

இந்த நிலநடுக்கம் தொடர்பாக விசிக எம்பி ரவிக்குமார் சமூக வலைதளங்களில் பதிவிடுகையில், நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் தலைவர் Thol.Thirumavalavan அவர்கள் வேறு சில நண்பர்களோடு கடைவீதிக்குப் போயிருந்தார். அதன் பின்னர் தொலைபேசியில் தயாளன் அவருக்குத் தகவலைச் சொன்னார். அதைக் கேட்டு விட்டு உடனடியாக அவர் வீடு திரும்பினார். வீடு திரும்பியதும் அவரிடம் எனது அனுபவத்தைச் சொன்னேன். அதற்குள் தொலைக்காட்சி சேனல்களில் நிலநடுக்கம் குறித்த செய்திகள் வரிசையாக ஒளிபரப்பாகத் தொடங்கி இருந்தன. அதைப் பார்த்தபடியே அவர் சொன்னார்: " நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன். நான் தனியே நடந்து போய்க் கொண்டிருக்கும் போது திடீரென்று நிலம் பிளக்கிறது. எல்லாம் அந்தப் பிளவுக்குள் சரிகின்றன. நான் தாவி ஒரு சுவரைப் பிடித்துக் கொள்கிறேன்.அப்படியே விழித்துக் கொண்டு விட்டேன் " என்று கூறினார். ' நடப்பதை முன் உணரும் ஆற்றல் ( premonition) சிலருக்கு உண்டு என்று சொல்வார்கள் ' என்று நான் அவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது காப்ரியல் கார்ஸியா மார்க்யெஸ் எழுதிய ஒரு சிறுகதை எனக்கு நினைவுக்கு வந்தது என எழுதியிருந்தார்.

இதேபோல் இப்போது பீகார் அமைச்சர் தேஜ்பிரதாப் யாதவ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரது கனவில் மகாபாரத யுத்தம் நடைபெறுகிறது; பின்னர் கடவுள் கிருஷ்ணர் தோன்றுகிறார். அதாவது தாம் கனவில் கடவுள் கிருஷ்ணரை கண்டதாக அந்த ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.
தேஜ்பிரதாப் ஏற்கனவே தம்மை கிருஷ்ணர், சிவன் போன்ற கடவுளர்களாக சித்தரித்து வீடியோக்களை வெளியிட்டவர். அண்மையில் திடீரென சைக்கிளில் பயணம் மேற்கொண்டார். அப்போது முலாயம்சிங் யாதவ் தமது கனவில் வந்து ஆசீர்வதித்தார்; அவரது கொள்கைப்படி சைக்கிளில் செல்கிறேன் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
विश्व रूप दर्शन योग मैं मुकुट से सुशोभित चक्र और गदा से सुसज्जित शस्त्रों के साथ सर्वत्र दीप्तिमान लोक के रूप में आपके रूप को देख रहा हूँ। इस चमचमाती अग्नि में आपके तेज को देख पाना कठिन है जो सभी दिशाओं से प्रस्फुटित होने वाले सूर्य के प्रकाश की भांति है। pic.twitter.com/tqcrkKH5Qo
— Tej Pratap Yadav (@TejYadav14) March 22, 2023












Click it and Unblock the Notifications