சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கு… பிரியங்கா கணவர் வதேராவுக்கு கிடைத்தது ஜாமீன்
டெல்லி: சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தொடா்பான வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபா்ட் வதேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
லண்டனில் சுமார் 2 மில்லியன் பவுண்ட் மதிப்புடைய சொத்துகள் வாங்கிய விவகாரத்தால் கோடிக்கணக்கான பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அதன் பேரில் ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.

வழக்கில் மனோஜ் அரோராவை கைது செய்ய பிப்ரவரி 6ம் தேதி வரை தடை விதித்து ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தன் மீது அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வதேரா முயற்சி மேற்கொண்டார்.
அதற்காக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அவர் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். அந்த வழக்கு நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ராபர்ட் வதேராவை பிப்ரவரி 16ம் தேதி வரை கைது செய்ய இடைக் கால தடை விதிக்கப்பட்டது. அத்துடன் பிப்ரவரி 6ம் தேதி முதல் அமலாக்கத் துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஆஜராகுவார் என்று நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications