ஃபனி புயல் பாதித்த இடங்களில் மீட்புப் பணிகள்.... வழக்கம் போல பழைய போட்டோக்களை வைரலாக்கிய ஆர்.எஸ்.எஸ்
Recommended Video
டெல்லி: ஃபனி புயலில் சிக்கி சின்னாபின்னமான ஒடிஷாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்தான் முதன் முதலாக மீட்புப் பணிகளில் களமிறங்கியதாக சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள் அனைத்துமே பழைய படங்கள் என்பது அம்பலமாகி உள்ளது.
ஃபனிபுயல் ஒடிஷாவை தாக்கிக் கொண்டிருக்கும்போதே இதோ நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ். தொன்டர்கள் என பெருமிதத்துடன் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் ஏராளமான படங்கள் வைரலாக ஷேர் செய்யப்பட்டன. இயற்கை பேரிடர் காலங்களில் இதுபோல ஒவ்வொரு முறையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பெயரில் பழைய போட்டோக்களை வைரலாக்குவது வாடிக்கை.

இம்முறையும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் வைரலாக்கிய படங்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து தி குயிண்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான செய்தியில், சமூக வலைதளங்களில் வைரலான படம் 2017-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. விஸ்வ சம்வத் கேந்திரா என்ற தெலுங்கானா இணையதளத்தில் 2017-ம் ஆண்டி டிசம்பர் 2-ந் தேதி அந்த படம் பதிவிடப்பட்டுள்ளது.
அதே படத்தை 2018-ம் ஆண்டு ஒடிஷாவை புயல் தாக்கிய போதும் இதோ நிவாரணப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் என ட்விட்டரில் வைரலாக்கியுள்ளனர். அதாவது 2017-ம் ஆண்டு எடுக்கப்பட்ட சில படங்களை வைத்துக் கொண்டுதான் ஒவ்வொரு புயலின் போதும் ஆர்.எஸ்.எஸ். பெயரில் சமூக வலைதளங்களில் உலவ விட்டு வைரலாக்குகின்றனர் என்கிறது குயிண்ட் செய்திக் கட்டுரை.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications