அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு.. வரலாறு காணாத வீழ்ச்சி!
டெல்லி: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையான சரிவைச் சந்திந்துள்ளது. இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பதட்டங்கள் அதிகரித்ததன் மத்தியில் 88.30 என்ற அளவுக்கு சரிவைப் பதிவு செய்துள்ளது இந்திய ரூபாய்.
அமெரிக்கா, இந்தியா மீது விதித்துள்ள அதீத வரிகள் காரணமாகவும், தொடர்ந்து வெளியேறும் அந்நிய நிதி காரணமாகவும் மாத இறுதியில் டாலரின் தேவை அதிகரித்த நிலையில் ஏற்பட்ட நெருக்கடியின் மத்தியில் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சியைக் கண்டு வருகிறது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், நேற்று முன்தினம், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 87.73 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், நேற்று எப்போதும் இல்லாத வகையில் குறைந்தபட்சமாக ரூ.88.30 ஐ தொட்டது. பின்னர், 88.21 என்ற நிலையை எட்டியது. நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சரிவின் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் ரூபாய் மதிப்பு 0.68% சரிந்தது.
ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் இந்தியப் பொருட்கள் மீதான 50 சதவிகித அமெரிக்க வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளதால், இறக்குமதியாளர்களிடமிருந்து வலுவான டாலர் தேவை ஏற்பட்டதால், இந்திய ரூபாயின் மதிப்பானது தனது வேகத்தை இழந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த பிப்ரவரியில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதன் முந்தைய மிகக் குறைந்த அளவான 87.95 ஐ எட்டியது. இந்நிலையில் தற்போது மேலும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இந்த ஆண்டு ஆசியாவின் மிக மோசமாகச் செயல்படும் கரன்சி ரூபாய் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய கடன் மற்றும் பங்குகளில் 9.7 பில்லியன் டாலர்களை விற்றுள்ளனர். கூடுதல் அமெரிக்க வரிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு அமர்வுகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் இருந்து 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக திரும்பப் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2% ஆகும். ஜவுளி மற்றும் நகைகள் போன்ற தொழிலாளர் மிகுந்த தொழில்களில் கூர்மையான மந்தநிலை வேலை இழப்புகளுக்கு வழிவகுக்கும் மற்றும் பொருளாதார தாக்கத்தை மோசமாக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications