'ரா' உட்பட இந்திய உளவு அமைப்புகளின் தலைமையில் அதிரடி மாற்றம்!
டெல்லி: இந்திய உளவு அமைப்பான, ஆய்வு மற்றும் பகுப்பாய்வு பிரிவு (ரா) தலைவராக சமந்த் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மிக முக்கியமான உளவு அமைப்பு 'ரா'. இது வெளிநாட்டிலும் உளவாளிகளை கொண்ட பரந்து விரிந்த ஒரு அமைப்பாகும். இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தின்போது தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்கள் தொடர்பாக, அந்த நாட்டு அரசுக்கு முன்பே இந்தியா எச்சரிக்கை விடுத்தது. அது 'ரா' வழங்கிய இன்புட்டை வைத்துதான். அந்த அளவுக்கு இந்திய உளவு அமைப்பு சர்வதேச நாடுகளிலும் வலுவாக உளவுத் தகவல்களை சேகரித்து வருகிறது.

இப்படிப்பட்ட முக்கியமான 'ரா' அமைப்பின் இன்சார்ஜ் என்ற பொறுப்பில் இருந்தவர்தான் சமந்த் கோயல். இப்போது அவர், 'ரா' தலைவராக்கப்பட்டுள்ளார். அதேபோல இந்திய உளவு அமைப்பின் காஷ்மீர் பிரிவில் 2வது இடத்தில் இருந்த அரவிந்த் குமார், முதலிடத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். அதாவது உளவுத்துறை இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சமந்த் கோயல் மற்றும் அரவிந்த் குமார் ஆகிய இருவருமே, 1984ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரிகளாகும். 1990களில் பஞ்சாப்பில் பிரிவினைவாத தீவிரவாதம் அதிகரித்தபோது, திறமையாக செயல்பட்டு, அதை முடிவுக்கு கொண்டுவர உதவியவர் சமந்த் கோயல். துபாய், லண்டன் ஆகிய நகரங்களிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
அரவிந்த் குமார், அசாம் மேகாலயா கேடரை சேர்ந்தவர். பீகார் பிரிவு, உளவுத்துறை தலைவராக இருந்தவர். இதுவரை 'ரா' தலைவராக பதவி வகித்தவர், அனில் தம்சனா. உளவுத்துறை இயக்குநராக இருந்தவர் ராஜிவ் ஜெயின் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications