'ரா' உட்பட இந்திய உளவு அமைப்புகளின் தலைமையில் அதிரடி மாற்றம்!
டெல்லி: இந்திய உளவு அமைப்பான, ஆய்வு மற்றும் பகுப்பாய்வு பிரிவு (ரா) தலைவராக சமந்த் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மிக முக்கியமான உளவு அமைப்பு 'ரா'. இது வெளிநாட்டிலும் உளவாளிகளை கொண்ட பரந்து விரிந்த ஒரு அமைப்பாகும். இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தின்போது தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்கள் தொடர்பாக, அந்த நாட்டு அரசுக்கு முன்பே இந்தியா எச்சரிக்கை விடுத்தது. அது 'ரா' வழங்கிய இன்புட்டை வைத்துதான். அந்த அளவுக்கு இந்திய உளவு அமைப்பு சர்வதேச நாடுகளிலும் வலுவாக உளவுத் தகவல்களை சேகரித்து வருகிறது.

இப்படிப்பட்ட முக்கியமான 'ரா' அமைப்பின் இன்சார்ஜ் என்ற பொறுப்பில் இருந்தவர்தான் சமந்த் கோயல். இப்போது அவர், 'ரா' தலைவராக்கப்பட்டுள்ளார். அதேபோல இந்திய உளவு அமைப்பின் காஷ்மீர் பிரிவில் 2வது இடத்தில் இருந்த அரவிந்த் குமார், முதலிடத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். அதாவது உளவுத்துறை இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சமந்த் கோயல் மற்றும் அரவிந்த் குமார் ஆகிய இருவருமே, 1984ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரிகளாகும். 1990களில் பஞ்சாப்பில் பிரிவினைவாத தீவிரவாதம் அதிகரித்தபோது, திறமையாக செயல்பட்டு, அதை முடிவுக்கு கொண்டுவர உதவியவர் சமந்த் கோயல். துபாய், லண்டன் ஆகிய நகரங்களிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
அரவிந்த் குமார், அசாம் மேகாலயா கேடரை சேர்ந்தவர். பீகார் பிரிவு, உளவுத்துறை தலைவராக இருந்தவர். இதுவரை 'ரா' தலைவராக பதவி வகித்தவர், அனில் தம்சனா. உளவுத்துறை இயக்குநராக இருந்தவர் ராஜிவ் ஜெயின் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications