பாட்னா சாஹிப்பில் பாஜகவின் ரவிசங்கர் பிரசாத்துடன் மோதும் காங்கிரஸின் சத்ருகன் சின்ஹா!
டெல்லி: பீகார் மாநிலம் பாட்னா சாஹிப்பில் காங்கிரஸ் சார்பில் சத்ருகன் சின்ஹா போட்டியிடுவதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாஜகவின் சார்பில் பீகாரின் பாட்னா சாஹிப்பில் நடிகரும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா இரு முறை போட்டியிட்டு எம்பியாக இருந்து வருகிறார். இந்நிலையில் பாஜகவில் அதிருப்தி எம்பியாக இருந்து வந்தார்.

ரபேல் குறித்து பல்வேறு கேள்விகளை சின்ஹா எழுப்பினார். இதனால் பாஜக தலைமை இவர் மீது கடும் கோபத்தில் இருந்தது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர்களான எல் கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை மோடியும் அமித்ஷாவும் நடத்திய விதம் சரியில்லை என கூறி அக்கட்சியிலிருந்து சின்ஹா விலகினார்.
இதையடுத்து ஏப்ரல் 6-ஆம் தேதி காங்கிரஸில் இணைவதாக தெரிவித்தார். மேலும் தான் காங்கிரஸில் இணைவதற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில் பாஜக மூத்த தலைவர்களை அந்த இருவரும் நடத்திய விதம் என்னை மிகவும் பாதித்துவிட்டது.
மேலும் என்னை திரிணமூல், ஆம் ஆத்மி கட்சியினர் அழைத்தனர். ஆனால் பாட்னா சாஹிப்பில் எனக்கு வாய்ப்பு தரும் கட்சியில் இணைய வேண்டும் என விரும்பினேன். அதன்படி காங்கிரஸில் இணையவுள்ளேன் என்றார்.
இதையடுத்து இன்றைய தினம் ராகுலை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் சத்ருகன் சின்ஹா இணைந்தார். மேலும் அவர் பாட்னா சாஹிப்பில் போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
-
காத்திருக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்.. கேரள தேர்தலில் இப்படியொரு சம்பவமா.! புதிய தேர்தல் சர்வே -
ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications