கொரோனா: அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களையே பிரசுரிக்கவும்.. ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: கொரோனா குறித்த புத்தம் புதிய தகவல்களை அரசின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திலிருந்து வெளியிட வேண்டும் என ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் போது போலி செய்திகள் மிகப் பெரிய இடையூறாக உள்ளதாக உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது.

அதில் உண்மைகளை அறியாமல் எந்த ஊடகமும் கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகளை அச்சிடவோ வெளியிடவோ ஒளிபரப்பவோ கூடாது என உத்தரவிட வேண்டும் என மத்திய அரசு தனது மனுவில் கோரிக்கை விடுத்தது.
இந்த வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு கூறுகையில் இந்தியாவில் அடுத்த 3 மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தொடரும் என்ற போலி செய்தியை இன்று ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீதியடைந்து பெருநகரங்களை விட்டு சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வதற்கு காரணமாகும்.
இந்த பீதியினால் அவர்கள் சொல்லொண்ணாத் துயரங்களை அடைகின்றனர். நடந்தே செல்லும் போது சிலர் தங்கள் உயிரையும் இழக்கின்றனர். அச்சுறுத்தலை ஏற்படும் போலி செய்திகள் எலக்ட்ரானிக் மீடியா, அச்சு மீடியா, சோஷியல் மீடியா ஆகியவற்றில் எங்கிருந்து வந்தது என்பதை எங்களால் கண்காணிக்க முடியாது.
எனவே கொரோனா தொடர்பான தகவல்களை அரசு அவ்வப்போது வெளியிட வேண்டும். இதற்காக இன்னும் 24 மணி நேரத்தில் ஒரு இணையதள பக்கத்தை உருவாக்கி அதில் அவ்வப்போது அப்டேட்ஸ்களை கொடுக்க வேண்டும்.
இந்த பக்கத்தில் இருந்து எடுக்கப்படும் தகவல்களே அதிகாரப்பூர்வமானது. எனவே ஊடகங்களும் கொரோனா குறித்த புத்தம் புதிய தகவல்களை அரசின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்திலிருந்து வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications