13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்!
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணி ஓய்வு பெற்ற நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பானுமதி கொலீஜியம் குழுவில் இடம்பெற்றுள்ளார். 13 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெண் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொலீஜியம் என்ற குழுவின் பரிந்துரையின் பேரில்தான் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்கும். அந்த வகையில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் இன்றுடன் பணி ஓய்வு பெற்றுவிட்டார்.

இதனால் கொலீஜியம் குழுவில் ஒரு இடம் காலியானது. இதையடுத்து அப்பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த பெண் நீதிபதியான பானுமதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் 13 ஆண்டுகளுக்கு பிறகு கொலீஜியம் குழுவில் ஒரு பெண் உறுப்பினர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இனி இந்த குழுவில் தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே, என். வி. ரமணா, அருண் மிஸ்ரா, ரோகிண்டன் பாலி நாரிமன், ஆர் பானுமதி ஆகியோர் 5 பேர் இருப்பர்.
தமிழகத்தைச் சேர்ந்த பானுமதி கடந்த 2014-இல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார். இவர் மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிபதியாக தனது பணியை தொடங்கினார்.
அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தார். பின்னர் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த போது தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதியாக கொலீஜிம் குழு பரிந்துரை செய்து நியமிக்கப்பட்டார்.
தற்போது கொலீஜியம் குழுவில் இடம் பெற்றுள்ள பானுமதியின் பதவிக்காலம் 9 மாதங்கள் மட்டுமே. இவர் அடுத்த ஆண்டு ஜூலை 19-இல் ஓய்வு பெறுகிறார். சுப்ரீம் கோர்ட்டில் மொத்தமுள்ள 34 நீதிபதிகளில் 3 பேர் மட்டுமே பெண்கள். அவர்களில் இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி, பானுமதி ஆகியோராவர்.
இதுவரை சுப்ரீம் கோர்ட்டில் 8 பெண்கள் மட்டுமே நீதிபதிகளாக இருந்துள்ளனர். நீண்ட நாள் பணியாற்றிய நீதிபதி ரூமா பால் ஆவார். நீதிபதிகள் பாத்திமா பீவி, சுஜாதா மனோகர், கியான் சுதா மிஸ்ரா, ரஞ்சனா தேசாய் ஆகியோர் 5 ஆண்டுகளுக்கும் குறைவாகவே நீதிபதியாக பணியாற்றியுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இது வரை ஒரு பெண் இருந்ததே இல்லை.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications