டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை.. முடிவு மதுரை ஹைகோர்ட் கையில்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டிக்டாக் செயலி மீது தீர்ப்பு வழங்குமாறு ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: டிக்-டாக் செயலி மீதான தடை குறித்த வழக்கில், வரும் 24ம் தேதி உயர் நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது.
இன்று இளசுகளிடையே பிரபலமாக உள்ளது டிக்-டாக் ஆப்! அதை விட நம்மவர்களை பைத்தியமாக்கி விட்டது. கொஞ்சம் ஓவராகவே ஆடி விட்டனர் நமது இளைஞர்கள்.
இது சீனாவில் இருந்து 2016-ல் நம்ம நாட்டுக்கு வந்தது. இளசுகளை வெகுவாக கவர்ந்த இந்த ஆப்பிற்கு கிட்டத்தட்ட மாணவர்கள் முதல் பலரும் அடிமையாகவே ஆகிவிட்டனர்.

விஷயம் விபரீதமானது
அது மட்டும் இல்லை, இந்த ஆப்பை பயன்படுத்தியவர்கள் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்டோர் தற்கொலையே செய்து கொண்டனர். மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்துதான் விஷயம் சீரியஸானது!

முத்துக்குமார்
பல்வேறு வகையிலும் தீமையை தரும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று எஸ். முத்துக்குமார் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் டிக்-டாக் செயலியை தடை செய்து உத்தரவிட்ட நீதிபதிகள் டிக்-டாக் செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது எனவும் ஹைகோர்ட் உத்தரவிட்டது.

வழக்கு விசாரணை
இதனால் நாலாபுறமும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சுப்ரீம்கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

24-ம்தேதி தீர்ப்பு
அப்போது டிக்-டாக் செயலி மீதான தடையை நீக்க கோரும் மனுவை ஹைகோர்ட் விசாரித்து தீர்ப்பளிக்குமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 24-ம் தேதியே இது சம்பந்தமாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் டிக்-டாக் மீதான தடை தளர்ந்ததாக கருதப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications