மேகதாது அணைக்கு எதிரான வழக்கு.. அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணை
டெல்லி: மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் அடுத்த வாரம் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துகிறது.
மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. ஆனால் அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் மேகதாதுவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் சுமார் ரூ. 5600 கோடியில் அணையை கட்ட அனுமதி கோரி மத்திய நீர் ஆணையத்தில் கர்நாடக அரசு வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது.
இதற்கு கடந்த நவம்பர் 25-ஆம் ஆம் தேதி ஒப்புதல் அளித்தது மத்திய அரசு. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தன் தரப்பு எதிர்ப்பை வலுவாக பதிவு செய்தது.
இந்நிலையில் மேகதாது விவகாரம் குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் காவிரியாற்றில் மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அணை கட்ட கூடாது.
கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர் ஆணையம் அளித்த அனுமதியை திரும்ப பெற கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அடுத்த வாரத்தில் விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் ஏற்றது.












Click it and Unblock the Notifications