விவசாய சட்டங்கள்... விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!
டெல்லி: மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக திமுக உள்பட எதிர்க்கட்சிகள் தொடுத்த வழக்கில் 4 வாரங்களில் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவசாய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதாவை அங்கீகரித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டு இருந்தார்.

இந்த நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் விவசாய அமைப்புகள், திமும, காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா உள்பட பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. பஞ்சாபில் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டம் நடந்தது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிராக்டர் பேரணி நடத்தி இருந்தார். இன்னும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலிதளம் சார்பில் இடம் பெற்று இருந்த ஒரே மத்திய அமைச்சர் ஹர்சிம் ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தார்.
இதற்கு முன்னதாக திமுக எம்பி சிவா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தன. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த சட்டங்களை எதிர்த்து தமிழக் அரசும் உச்ச நீதிமனறத்தில் வழக்கு தொடர வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கோரிக்கை வைத்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே, இந்த மனுவுக்கு 4 வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த வழக்கை பின்னர் ஒத்தி வைத்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications