மத்திய பாஜக அரசுக்கு எதிரான கேரளா வழக்கு- அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு!
கேரளாவில் ஆளும் இந்தியாவின் ஒரே இடதுசாரி அரசுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு போதுமான நிதி வழங்குவது இல்லை என்பது அம்மாநிலத்தின் குற்றச்சாட்டு. கேரளா மாநில அரசு, திட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைக்க மறுப்பதால் மத்திய அரசு நிதி தர மறுக்கிறது என்பதும் மற்றொரு குற்றச்சாட்டு.
இத்தகைய நிலைமைகளால் அனுமதிக்கப்பட்ட நிதி வரம்புக்குள் வெளியில் கடன் வாங்க கேரள அரசு முயற்சிக்கிறது. இதற்கும் மத்திய பாஜக அரசு அனுமதி தர மறுக்கிறது. இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக கேரளா மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இத்தகைய நிலைமைகளால் அனுமதிக்கப்பட்ட நிதி வரம்புக்குள் வெளியில் கேரளா அரசு கடன் வாங்க அம்மாநில அரசு முயற்சிக்கிறது. இதற்கும் மத்திய பாஜக அரசு அனுமதி தர மறுக்கிறது. இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக கேரளா மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ரூ13,600 கோடி கடன் வாங்க கேரளாவுக்கு அனுமதி தர மத்திய அரசு தயாராக உள்ளது; ஆனால் மத்திய அரசுக்கு எதிரான வழக்கை கேரளா திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை கேரளா மாநில அரசு நிராகரித்தது.
கேரளா அரசின் வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு, கேரளா அரசு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களுக்குப் பின்னர், அரசியல் சாசனத்தின் 293-வது பிரிவு இதுவரை கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. இது மத்திய- மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி சார்ந்தது. இதனால் இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றுவதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் கேரளாவின் கடன் வாங்க அனுமதி கோரும் கோரிக்கையை இடைக்காலமாக மத்திய அரசு பரிசீலனை செய்யும் என நம்புவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications