ஐ பெரியசாமிக்கு நிம்மதி! சொத்துகுவிப்பு வழக்கில் ஹைகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை! சுப்ரீம் கோர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ பெரியசாமி விடுவிப்பை ரத்து செய்த சென்னை ஹைகோர்ட்டின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பதில் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஹைகோர்ட் உத்தரவுக்கு எதிராக ஐ பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களில் ஒருவராக இருப்பவர் ஐ. பெரியசாமி. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக ஐ பெரியசாமி இருந்து வருகிறார். ஐ பெரியசாமி கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில், அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

I Periyasamy Supreme Court Enforcement Directorate

இந்த புகாரின் பேரில் ஐ பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம், ஐ பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. இதன் பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஐ பெரியசாமி மற்றும் குடும்பத்தினரை விடுவித்தது செல்லாது என கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, 6 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐ பெரியசாமி மேல் முறையீடு செய்துள்ளார்.

இந்த மனு வரும் இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி திபான்கர் தத்தா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ பெரியசாமி விடுவிப்பை ரத்து செய்த சென்னை ஹைகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பதில் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் தான் ஐ பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, திண்டுக்கல் உள்பட ஐ பெரியசாமிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில்
அமலாக்கத்துறை சோதனை நடந்தது. ஐ பெரியசாமியின் மகனும் பழனி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவுமான ஐபி செந்தில் குமார் மற்றும் வள்ளலார் நகரில் உள்ள ஐ பெரியசாமி மகள் இந்திரானி இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகின. இந்த நிலையில் தான் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+