14 அப்பாவிகள் சுட்டு கொலை.. ராணுவத்தினருக்கு எதிரான நாகாலாந்து போலீஸ் விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட் தடை
டெல்லி: 14 அப்பாவி பொதுமக்களை பயங்கரவாதிகள் என சந்தேகித்து சுட்டுப் படுகொலை செயத 30 ராணுவ வீரர்களுக்கு எதிரான நாகாலாந்து போலீசாரின் விசாரணைக்கு உச்சநிநிதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நாகாலாந்து மாநிலத்தில் தனிநாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆயுதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மியான்மர் எல்லையில் பதுங்கி இருந்து இந்தியாவுக்குள் பாதுகாப்பு படையினர் மீது நாகா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியும் வருகின்றனர்.

இதனால் நாகாலாந்தில் ஆயுதப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டமும் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி, 14 அப்பாவி தொழிலாளர்களை பயங்கரவாதிகள் என சந்தேகித்து ஆயுதப் படையினர் ஈவிரக்கமே இல்லாமல் சுட்டுப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே கடும் அதிர்ச்சி அடைய வைத்தது. நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ராணுவத்தினருக்கு எதிராகவும் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன.
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு நாகாலாந்து போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யபப்ட்டது. இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ராணுவத்தினருக்கு எதிரான நாகாலாந்து போலீசாரின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications