ஜம்மு காஷ்மீர் தடை உத்தரவுகளுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கப்பட்டதை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுகளுக்கு எதிரான வழக்குகளில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. அத்துடன் தலைவர்கள் கைது, இணைய பயன்பாட்டுக்கு தடை, செல்போன் சேவைகள் துண்டிப்பு, ஊரடங்கு உத்தரவுகள் ஆகியவையும் அமல்படுத்தப்பட்டன.

SC to deliver verdict on Friday on pleas challenging curbs in Jammu Kashmir

இத்தடைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட பலரும் வழக்குகள் தொடர்ந்தனர். இவ்வழக்குகளை நீதிபதிகள் என்.வி. ரமணா, ஆர். சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது.

இவ்வழக்கின் அனைத்து விசாரணைகளும் கடந்த ஆண்டு நவம்பர் 27-ல் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+