9 மாவட்டங்களில் 4 மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: தமிழகத்தில் தற்போது 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த 9 மாவட்டங்களிலும் 4 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், அனைத்து மாவட்டங்களிலும் வார்டுகள் முறையாக மறுவரையறை செய்த பின்னரே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது வார்டு வரையறை பணிகள் நிறைவு பெறாமல் எப்படி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தனர். இதனால் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்தலை ஒத்திவைக்க மாநில தேர்தல் ஆணையம் தயார் என கூறியது.
இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதித்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தற்போது தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் இந்த 9 மாவட்டங்களிலும் வார்டுகளை வரையறை செய்து 4 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கவும் உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications