பள்ளிகள், மால்கள், பொது போக்குவரத்து மே 3-க்கு பிறகும் முடக்கம்?.. ஊரடங்கு நீட்டிப்பா?
டெல்லி: கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் (மால்கள்), மத வழிப்பாட்டு தலங்கள், பொது போக்குவரத்து ஆகியன மே 3 ஆம் தேதிக்கு பிறகும் மூடியிருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வைரஸின் சமூகப் பரவலை தடுக்க மத்திய - மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் நோயின் தாக்கம் குறைந்தபாடில்லை.
இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட லாக்டவுனானது வரும் மே 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என பல முதல்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

முழு நேர சேவை
சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பச்சை மண்டலங்களில் தனியார் வாகனங்களை கட்டுப்பாடுடன் இயக்க வேண்டும். ஆனால் இந்த பகுதிகளில் விமானம் மற்றும் ரயில்களின் முழு நேர சேவை விரைவில் தொடங்கப்பட வாய்ப்புகள் இல்லை.

இறுதி
மே மாதத்தில் மத்தியில் ரயில்கள் மற்றும் விமான சேவைகள் முறைப்படுத்தி தொடங்க வாய்ப்புள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், மால்கள், மத வழிப்பாட்டு தலங்கள், பொது போக்குவரத்து ஆகியவை இயங்காது. அது போல் பொதுமக்கள் கூடுவதற்கும் மே 3 ஆம் தேதிக்கு பிறகும் தடை இருக்கும் என தெரிகிறது. இந்த லாக்டவுனை மீண்டும் நீட்டிப்பதா இல்லை தளர்த்துவதா என்பது குறித்து இந்த வார இறுதியில் முடிவு எடுக்கப்படும்.

ஆலோசனை
நேற்று பிரதமருடனான ஆலோசனையில் பேச அனுமதிக்கப்பட்ட 9 முதல்வர்களில் 5 பேராவது மே 3 க்கு பிறகும் பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அது போல் கோவிட் 19 பாதிக்காத மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் சில செயல்பாடுகளை தளர்த்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய்
ஒடிஸா, கோவா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் இன்னும் சில வாரங்களுக்கு பொது முடக்கம் தேவை என தெரிவித்துள்ளனர். அது போல் கடந்த 28 நாட்களில் எந்தவித கொரோனா நோயாளியும் இல்லாத பச்சை மண்டலங்களில் தளர்வுகளை கொண்டு வரவும் கூறப்பட்டன. மே 3 ஆம் தேதிக்கு பிறகு என்ன செய்யலாம் என்பதை விரைவில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications