அசோக சிங்கங்களுக்கு அவமரியாதை.. பொங்கிய எதிர்க்கட்சிகள்! "அப்படி இல்லீங்க.." சிற்பி விளக்கம்
புதுடெல்லி: புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தின் உச்சியில் நிறுவப்பட்டுள்ள 9 ஆயிரத்து 500 கிலோ எடைகொண்ட தேசிய நினைவு சின்னத்தை அவமதிப்பு செய்துள்ளதாக பாஜக-வினரை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கட்டிடத்தின் உச்சியில் 9 ஆயிரத்து 300 கிலோ எடையில் வெண்கலத்தால் ஆன தேசிய நினைவுச்சின்னம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த தேசிய நினைவு சின்னத்தை கடந்த 11-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அசோக சக்கரத்துடன் 4 சிங்கங்கள் நிற்பது போன்ற தேசிய சின்னத்தில் பல்வேறு மாறுபாடுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சாடின.

தேவையில்லாத ஆக்ரோஷத்துடன்...
புதிய சின்னம் மாற்றியமைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி ஜவஹர் சிர்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், "நாட்டின் தேசியச் சின்னத்தில் உண்மையான சிங்கங்கள், அழகாகவும், கம்பீரமாகவும் இருக்கும். ஆனால், தற்போது நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள மோடியின் சிங்கங்கள், உறுமிக்கொண்டு தேவையில்லாத ஆக்ரோஷத்துடன் சரியான அளவு இல்லாமல் இருக்கின்றன. ஆகவே இதை உடனே மாற்ற வேண்டும்" எனப்பதிவிட்டு இருந்தார்.

சின்னத்தை மாற்ற வேண்டும்
மேலும், சில எதிர்க்கட்சிகள் புதிதாக நிறுவப்பட்டுள்ள நான்முகசின்னத்தை மாற்ற வேண்டும் என்றும், மாற்றி அமைக்கவில்லை என்றால் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாகவும் கூறி வருகின்றன.
இந்த நிலையில் இதுகுறித்து சிற்பத்தை உருவாக்கிய சிற்பி சுனில் தியோர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "இது சாரநாத்தில் உள்ள தேசியச் சின்னத்தின் மாதிரி வடிவம்தான். 99 சதவீதம் அசோக சின்னத்தை அப்படியே பிரதிபலித்து வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படங்கள் சிற்பத்தின் கீழே இருந்து எடுக்கப்பட்டவை. எனவே, அதனால் அதன் வெளிப்பாடுகள் ஆக்ரோஷமாகவும், வாய் பெரியதாகவும் தோன்றுகிறது.

சிறு மாறுபாடும் இல்லை
ஒரு கலைஞராக நாங்கள் அருங்காட்சியகம் சென்று ஆய்வுகள் மேற்கொண்டோம். அசல் சின்னம் 2.5 அடி உள்ளது. இதை அப்படியே நாங்கள் பெரிதாக வடிவமைத்துள்ளோம். எனவே, அனைத்தும் பெரிதாக தெரிகிறது என்பது குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் தற்போது காணும் சிற்பம் குறைந்தது 100 மீட்டர் தொலைவில் உள்ளது. தொலைவில் இருந்தாலும் அதேபோன்றுதான் காட்சியளிக்கிறது.
நாங்கள் கூறுவது போல, மிக தொலைவில் இருந்தே இதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். இதை மனதில் கொண்டே சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் பார்க்கும் இந்த சின்னத்தில் எந்த சிறு மாறுபாடும் இல்லை. எனது பார்வை மட்டத்தில் சின்னத்துடன் பொருந்தும் வகையிலே உள்ளது"என்றார்.

விமர்சனங்களுக்கு பதில்
ஆக்ரோஷம் மிக்க சிங்கமாக திட்டமிட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றது பற்றி அவரிடம் கேட்ட போது, " மிகவும் பலம் மிக்க பண்புநலன் கொண்ட சிங்கம் அமைதியை பரப்புகிறது என்பதே இதன் கருத்தாக்கம். ஆக்ரோஷமாக ஒருபோதும் அமைதியை பரப்ப முடியாது" என்றார்.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications