அனல் பறந்த 6 மணி நேரம்.. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று 2 வது நாள் விவாதம்
டெல்லி: மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான முதல் நாள் விவாதம் அனல் பறந்த நிலையில் இன்று 2வது நாள் விவாதம் நடைபெறுகிறது.
மணிப்பூரில் குக்கி இன பழங்குடி மக்கள் மெய்தி இனத்தவரால் கொடூரமாக கொல்லப்பட்டும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரங்கள் உலக அரங்கையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. குறிப்பாக பெண்களை நிர்வாண ஊர்வலமாக அழைத்து சென்று கும்பல் பலாத்காரம் செய்த வீடியோ வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இதுபற்றி பேச வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். பிரதமர் மோடி மக்களவையில் இதுகுறித்து பேசாத நிலையில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தனர்.
50 உறுப்பினர்கள் ஆதரவு இருந்ததால் சபாநாயகரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு சம்மதம் தெரிவித்தார். நேற்று மக்களவையில் அதன் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்றது. ராகுல் காந்தி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகாய் விவாதத்தை தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் மௌனத்தை கடுமையாக விமர்சித்த அவர், இதுபற்றி பிரதமர் பேச வலியுறுத்தினார். பாஜக தரப்பில் நிஷிகாந்த் துபே விவாதத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில் சவுகதா ராய், டிஆர் பாலு, திருமாவளவன் உட்பட பலர் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரை நிகழ்த்தினார்கள்.
குறிப்பாக மணிப்பூர் விவகாரம் மட்டுமின்றி, விலைவாசி உயர்வு, வேலையிழப்பு உட்பட பல்வேறு விவகாரங்களை விவாதத்தின்போது எழுப்பி மத்திய பாஜக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வைத்தனர். நேற்றைய முதல் நாள் விவாதம் மட்டும் சுமார் 6 மணி நேரம் அனல் பறக்க நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று மக்களவையில் 2 வது நாள் விவாதம் நடைபெற உள்ளது. இன்றும் எதிர்க்கட்சிகள் தரப்பிலும், பாஜக தரப்பிலும் மாறி மாறி விவாதிக்க உள்ளனர். இன்று பிரதமர் மோடி பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்துள்ளது. ஆனால், அவர் நாளை பேசுவார் என்றும், அதை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications