திடீரென முடங்கிய எஸ்பிஐ ஆன்லைன் வங்கி சேவைகள்.. யுபிஐ பரிவர்த்தனையும் முடங்கியதால் தவித்த கஸ்டமர்ஸ்
டெல்லி: ஸ்.பி.ஐ வங்கியின் ஆன்லைன் சேவைகள் இன்று காலை முதல் முடங்கியது. இதனால், வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்தனர். நெட் பேங்கிங், யோனோ ஆப் ஆகியவையும் முடங்கியதால் எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்ய முடியாத நிலை இருந்ததாக வாடிக்கையாளர்கள் பலரும் புகார் தெரிவித்தனர்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி. நாடு முழுவதும் சுமார் 22 ஆயிரம் கிளைகள் இந்த வங்கிக்கு உள்ளன. இந்திய வங்கிகளில் அதிகம் வாடிக்கையாளர்களை கொண்ட வங்கிகளில் ஒன்றாக எஸ்.பி.ஐ உள்ளது. தற்போது பண பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமே மேற்கொள்ளும் சூழல் உள்ளது.

இந்த நிலையில், எஸ்.பி.ஐ வங்கியின் ஆன்லைன் சேவைகள் இன்று காலை முதல் முடங்கியது. இதனால், வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்தனர். நெட் பேங்கிங், யோனோ ஆப் ஆகியவையும் முடங்கியதால் எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்ய முடியாத நிலை இருந்ததாக வாடிக்கையாளர்கள் பலரும் புகார் தெரிவித்தனர். எஸ்.பி.ஐ வங்கியின் சர்வர்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பரிவர்த்தனை மேற்கொள்வதில் பிரச்சினை எழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்கள் பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பண பரிவர்த்தனை செய்ய முடியாத நிலை இருப்பதாக ஆதங்கத்துடன் பதிவிட்டு வந்தனர். இது தொடர்பாக எஸ்.பி.ஐ வங்கி அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. சில மணி நேரம் கழித்து மீண்டும் எஸ்.பி.ஐ வங்கியின் ஆன்லைன் வங்கி சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதையும் காண முடிந்து.












Click it and Unblock the Notifications