திருமணம் செய்வதாக செக்ஸ் வைத்து கொள்வதும் பலாத்காரம் தான்: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
டெல்லி: திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்களிடம் செக்ஸ் வைத்து கொள்வதும் பாலியல் பலாத்காரம் தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சத்தீஸ்கரை சேர்ந்த பெண் ஒருவர் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தன்னை மருத்துவர் ஒருவர் திருமணம் செய்வதாக கூறி என்னுடன் 2013ம் ஆண்டு பாலியல் உறவு வைத்து கொண்டார்.
அதன் பின்னர் மருத்துவர் எனக்கு கொடுத்த சத்தியத்தை மறந்துவிட்டு, வேறு பெண்ணை அவர் திருமணம் செய்ய முடிவு செய்தார்.

ஐகோர்ட்டில் வழக்கு
நிச்சயதார்த்தம் முடிந்த அந்த பெண்ணுடனும் அந்த மருத்துவர் பாலியல் உறவு வைத்துள்ளார். அதனால் என்னை அவர் திருமணம் செய்ய முடியாது என மறுத்து விட்டார் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

மருத்துவர் மேல்முறையீடு
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மருத்துவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து எப்ஐஆர் போட உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து மருத்துவர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

பலாத்காரம்
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், எல் நாகேஸ்வர ராவ் மற்றும் எம் ஆர் சஹா ஆகியோர், "பலாத்காரம் என்பது பெண்ணின் கௌரவத்தையும், மதிப்பையும் சீர்குலைக்கிறது. பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை, பலாத்கார குற்றவாளி பொருளாதார ரீதியாக காப்பாற்றினாலும், அவர் செய்தது குற்றம் இல்லை என்று ஆகிவிடாது" என்று தெரிவித்தனர்.

7 ஆண்டு சிறை
மேலும் திருமணம் செய்வதாக ஏமாற்றி செக்ஸ் வைத்து கொள்வதும் பாலியல் பலாத்காரம் தான் என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். எனினும் பலாத்கார குற்றவாளி மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications