காங்கிரசுடன் கூட்டணி.. லோக்சபாவில் பாஜகவுக்கு ஆதரவு.. ராஜ்யசபாவில் யூ டர்ன்.. சிவசேனா நிலையை பாருங்க
டெல்லி: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து உள்ளபோதிலும், லோக்சபாவில் தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக சிவசேனா வாக்களித்துள்ளது.
காங்கிரஸ் மட்டுமின்றி, மகாராஷ்டிராவில் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியும்கூட, இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்து இருந்த நிலையில், சிவசேனா மட்டும் தனியே தனது பழைய பங்காளியான பாஜகவின் பாதையில் பயணித்துள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் அல்லாத பிற மதப் பிரிவினர் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது. எனவே இதனை முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் என்று வர்ணிக்கின்றன எதிர்க்கட்சிகள்.

குறைந்தபட்ச பொது செயல் திட்டம்
தீவிர இந்துத்துவா கட்சியாக அறியப்பட்டு வரும் சிவசேனா, மகாராஷ்டிராவில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. அப்போது ஏற்படுத்தப்பட்ட குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில், மதச்சார்பின்மை பாதுகாக்கப்படும் என்ற ஒரு ஷரத்து இடம்பெற்றுள்ளது.

நாட்டு நலன்
இது குறித்து சிவசேனா கட்சியின் எம்பி ஒருவர் டிவி சேனலிடம் கூறுகையில், தேசத்தின் நலனுக்காக இவ்வாறு ஒரு முடிவு எடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தோம் என்று கூறினார்.

ராஜ்யசபாவில் வேறு முடிவு
அதேநேரம் சிவசேனா கட்சி மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், ராஜ்யசபாவில் இந்த சட்டத்துக்கு எதிராக எங்கள் கட்சி வாக்களிக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

நாளை தாக்கல்
லோக்சபாவில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை இருப்பதால் சட்டத்தை எளிதாக நிறைவேற்ற முடிந்தது. ஆனால் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் தயவு தேவைப்படும் நிலையில், சிவசேனா இந்த முடிவை எடுத்துள்ளது. சட்ட திருத்த மசோதா, நாளை, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications