லாரி டிரைவர்கள் ஸ்டிரைக் வாபஸ்! இந்தியாவில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு இனி சீராகும்?
டெல்லி: மத்திய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து லாரி டிரைவர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி தற்போது தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதால் இயல்பு நிலை திரும்பியது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டங்களில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற் போல் சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதிநியம், பாரதிய நியாய சன்ஹிதா என்ற இந்தி பெயரில் மாற்றம் செய்யப்பட்டன. இந்த மூன்று குற்றவியல் சட்ட திருத்த மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அளிக்கப்பட்டுள்ளது.
இதில் வாகன விபத்து தொடர்பான சட்டத்திருத்தம், அதாவது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் சாலை விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 7 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீர், இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா, பீகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் லாரி, பஸ், கார் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது போல் டேங்கர் லாரி டிரைவர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பெட்ரோல் டீசல் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டது. இதையடுத்து பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதியது. இந்த போராட்டம் குறித்து மத்திய அரசு நிர்வாகி ஒருவர் கூறுகையில் விபத்தை ஏற்படுத்தும் டிரைவர்கள் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் அனுமதித்தாலோ அல்லது விபத்து குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தாலே சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்றார்.
இதனால் டெல்லி உள்ளிட்ட இடங்களில் 2000 பெட்ரோல் பங்குகளில் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அனைத்திந்திய வாகன போக்குவரத்து சங்க நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புதிய சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதில் ஓட்டுநர்களுக்கு அதிருப்தி இருக்கும் பட்சத்தில் அதை மத்திய அரசு பரிசீலிக்க தயார் நிலையில் இருக்கிறது என லாரி டிரைவர்களுக்கு மத்திய அரசு உறுதிஅளித்தது.
இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக லாரி டிரைவர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். டெல்லியில் இன்று இயல்பு நிலை திரும்பியது. 400 பெட்ரோல் பம்புகளுக்கு பெட்ரோல் டீசல் சப்ளை செய்யப்பட்டுள்ளது. அது போல் பெட்ரோல், டீசலின் விலையும் இயல்பு நிலையில் உள்ளது. ஒரு வேளை இந்த போராட்டம் தொடர்ந்திருந்தால் விலையில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்திருக்க கூடும்.
காய்கறிகளை பொருத்தமட்டில் டெல்லியில் செவ்வாய்க்கிழமை விநியோகம் என்பது இயல்பாக இருந்தது. ஆனால் லாரி ஓட்டுநர்களின் ஸ்டிரைக்கால் மகாராஷ்டிரா, கொல்கத்தா, கர்நாடகாவில் இருந்து காய்கறிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பல்வேறு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் இன்று காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என கூறப்படுகிறது.
-
கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லை.. ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சிக்கலில் மாட்டியுள்ளது ஏன்! -
மத்திய அரசின்.. ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ் கார்டு இருக்கா? குட்நியூஸ் வந்துடுச்சு! -
இந்தியாவை நம்ப வைத்து ஏமாற்றிய பிரான்ஸ்.. ரஃபேல் விமானங்கள் வேஸ்ட்! மொத்தமா போச்சு! -
மோடியை கொல்ல சதி.. அலறிய அமெரிக்க CIA.. உடனே இந்தியாவுக்கு பறந்த மெசேஜ்.. 3 பேர் அதிரடியாக கைது -
அசையாமல் ஆணி அடித்தார் போல நிற்க வைக்கும் 'ஸோம்பி' போதைப்பொருள்! பெங்களூரை தொடர்ந்து பீகாரிலும் ஷாக் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின்












Click it and Unblock the Notifications