Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லாரி டிரைவர்கள் ஸ்டிரைக் வாபஸ்! இந்தியாவில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு இனி சீராகும்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து லாரி டிரைவர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி தற்போது தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டதால் இயல்பு நிலை திரும்பியது.

ஆங்கிலேயர்கள் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டங்களில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற் போல் சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

Shortage of Petrol and Diesel will be resolved as lorry drivers withdraw protest

இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதிநியம், பாரதிய நியாய சன்ஹிதா என்ற இந்தி பெயரில் மாற்றம் செய்யப்பட்டன. இந்த மூன்று குற்றவியல் சட்ட திருத்த மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அளிக்கப்பட்டுள்ளது.

இதில் வாகன விபத்து தொடர்பான சட்டத்திருத்தம், அதாவது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் சாலை விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 7 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீர், இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா, பீகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் லாரி, பஸ், கார் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது போல் டேங்கர் லாரி டிரைவர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பெட்ரோல் டீசல் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டது. இதையடுத்து பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதியது. இந்த போராட்டம் குறித்து மத்திய அரசு நிர்வாகி ஒருவர் கூறுகையில் விபத்தை ஏற்படுத்தும் டிரைவர்கள் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் அனுமதித்தாலோ அல்லது விபத்து குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தாலே சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்றார்.

இதனால் டெல்லி உள்ளிட்ட இடங்களில் 2000 பெட்ரோல் பங்குகளில் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அனைத்திந்திய வாகன போக்குவரத்து சங்க நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புதிய சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதில் ஓட்டுநர்களுக்கு அதிருப்தி இருக்கும் பட்சத்தில் அதை மத்திய அரசு பரிசீலிக்க தயார் நிலையில் இருக்கிறது என லாரி டிரைவர்களுக்கு மத்திய அரசு உறுதிஅளித்தது.

இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக லாரி டிரைவர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். டெல்லியில் இன்று இயல்பு நிலை திரும்பியது. 400 பெட்ரோல் பம்புகளுக்கு பெட்ரோல் டீசல் சப்ளை செய்யப்பட்டுள்ளது. அது போல் பெட்ரோல், டீசலின் விலையும் இயல்பு நிலையில் உள்ளது. ஒரு வேளை இந்த போராட்டம் தொடர்ந்திருந்தால் விலையில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்திருக்க கூடும்.

காய்கறிகளை பொருத்தமட்டில் டெல்லியில் செவ்வாய்க்கிழமை விநியோகம் என்பது இயல்பாக இருந்தது. ஆனால் லாரி ஓட்டுநர்களின் ஸ்டிரைக்கால் மகாராஷ்டிரா, கொல்கத்தா, கர்நாடகாவில் இருந்து காய்கறிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பல்வேறு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் இன்று காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+