ஒருவர் மூலம் 406 பேருக்கு கொரோனா பரவும்... ஐ.சி.எம்.ஆர். தகவல்
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுள்ள ஒரு நோயாளி சமூக விலகலை கடைபிடிக்காமல் இருந்தால் அவர் மூலம் 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா பரவக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை முழு வீச்சில் செயலாற்றி வருகிறது. சமூக விலகலை கடைபிடிப்பதன் மூலம் நோய் தொற்று குறைய வாய்ப்புள்ளதால் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஆகச்சிறந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் குறைந்தபாடில்லை.

இதுவரை நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை உறுதிசெய்ய 136 அரசு பரிசோதனை நிலையங்களும் 59 தனியார் பரிசோதனை நிலையங்களும் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக ஐ சி எம்.ஆர் தலைவர் கங்கேத்கர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஹைட்ராக்ஸி குளோராகுயின் மாத்திரையை பொறுத்தவரை குறிப்பிட்ட ஒரு சில நோயாளிகளுக்கு மட்டுமே அளிக்கப்படுவதாகவும், அதுவும் நோயின் தீவிரத்தன்மையை அறிந்து அதற்கேற்றது போல் இந்த மாத்திரைகள் கொடுக்கப்படுவதாகவும் மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் போதிய அளவில் இருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் கொரோனா தொற்றின் விகிதத்தை ஒரு நோயாளி மூலம் இருவர் என்ற அளவிற்கு வெகுவாக குறைக்க முடியும் என லாவ் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் அதே வேளையில் கொரோனா தொற்றுள்ள ஒரு நோயாளி சமூக இடைவெளியை பின்பற்றவில்லை எனில் அவர் மூலம் 30 நாட்களில் 406 பேருக்கு அது பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications