ரூ.600 கோடி ஐடிபிஐ வங்கி மோசடியில் சிவசங்கரன் வெளிநாடு தப்பியது எப்படி? வெளியான திடுக் தகவல்
Recommended Video

டெல்லி: ரூ.600 கோடி ஐடிபிஐ வங்கி மோசடியில் தொடர்புடைய சிவசங்கரன், லுக்அவுட் நோட்டீசை மீறி வெளிநாடு செல்ல சிபிஐ உதவி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இந்தியா டுடே செய்தி சேனல் ஒரு அதிர்ச்சிகர செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த, சிபிஐ அதிகாரி ஒருவர் லுக்அவுட் நோட்டீஸ் விதிமீறல் கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்ததாகவும், ஆனால், அதை மீறி, சிவசங்கரன் வெளிநாடு தப்பிச் செல்ல உதவப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மத்திய கண்காணிப்பு கமிட்டி பரிந்துரைக்கு பிறகு, கடந்த ஏப்ரல் மாதம், ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் மற்றும் 3 நிறுவனங்களுக்குக எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ரூ.600 கோடி வங்கி மோசடி தொடர்பாக, ஏர்செல் சன்ஷைன் லிமிட்டட் (பிரிட்டீஷ் விர்ஜின் ஐஸ்லேன்ட்ஸ்) மற்றும் வின் வின்ட் ஓஒய் (ஃபின்லேன்ட்) மற்றும் 15 ஐடிபிஐ வங்கி அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது சிபிஐ.

சிபிஐயிடம் புகார் இல்லை
சிபிஐ அதிகாரிகள் ஒருவர் கூறுகையில், "ஐடிபிஐ வங்கி உயர் அதிகாரிகள் உதவியோடுதான் ரூ.600 கோடி மோசடி நடந்துள்ளது. வங்கி சார்பில் சிபிஐயிடம் இதுதொடர்பாக புகார் அளிக்கவில்லை" என்றார்.

தப்புவிக்கும் முயற்சி
சிவசங்கரனை தப்புவிக்கும் முயற்சிகள் ஆகஸ்ட் மாதமே துவங்கிவிட்டதாம். பெங்களூரிலுள்ள வங்கிகள் பாதுகாப்பு மற்றும் மோசடி பிரிவிலிருந்து (பிஎஸ்எப்சி) டெல்லியிலுள்ள ஊழல் எதிர்ப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டதாம்.

விசாரணை
2018 ஆகஸ்ட் 16ம் தேதி, 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி, பெங்களூரிலிருந்து இந்த வழக்கு, சிபிஐ டிஐஜி மணிஷ் குமார் சின்ஹாவிற்கு மாற்றப்பட்டது. ஆகஸ்ட் 12ம் தேதி அதாவது வழக்கு மாற்றப்படும் 4 நாட்கள் முன்பாக, சிவசங்கரனிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

வெளிநாடு
சிபிஐயை செப்டம்பர் 3ம் தேதி அணுகிய சிவசங்கரன், வெளிநாடு செல்ல வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார். ஆனால் இதை ஏற்று லுக்அவுட் நோட்டீசை தளர்த்தினால் சிவசங்கரன் வெளிநாடுக்கே தப்பியோடிவிடுவும் வாய்ப்பு உள்ளது என்று சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா தெரிவித்துள்ளார்.

சிபிஐக்கு வழக்கு
ஆனால் வர்மாவின் அறிவுறுத்தலை மீறி, குடியுரிமை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு மூலமாக, லுக்அவுட் நோட்டீஸ் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால்தான் அவர் தப்பியோடிவிட்டார். சிபிஐ இயக்குநர் பரிந்துரையை மீறி, எப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது? அவருக்கு இது தெரியுமா? பெங்களூரிலிருந்து சிபிஐக்கு இந்த வழக்கு ஏன் மாற்றப்பட்டது என்ற கேள்விகள் எஞ்சி நிற்கின்றன.

தெரிந்தே மோசடி
2010ம் ஆண்டு ஐடிபிஐ வங்கி வின் வின்ட் ஓஒய்க்கு ரூ.322 கோடியை கடனாக வழங்கியது. 2013ல் அந்த நிறுவனம் மஞ்சள் நோட்டீஸ் அனுப்பியதால், இந்த கடன் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இது தெரிந்திருந்தும் கூட ஐடிபிஐ வங்கி ஆக்செல் சன்ஷைன் லிமிட்டடுக்கு 2014ல் ரூ.523 கோடியை கடனாக வழங்கியுள்ளது. சிவா குரூப்பை சேர்ந்த இந்த நிறுவனத்திற்கும், வின் வின்ட் ஓஒய் நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளது தெரிந்தும் இது நடந்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications