"எனது புகழை கெடுக்க சிலர் வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்துள்ளனர்" பிரதமர் மோடி அட்டாக்!
டெல்லி: கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்தே எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என சிலர் வேலைசெய்து கொண்டு இருக்கின்றனர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குறிப்பிட்ட பல்வேறு நபர்களுடன் இதற்காக ஒப்பந்தம் போட்டுள்ளனர். தொடர்ந்து மோடியின் புகழை களங்கப்படுத்த முயற்சித்து வருகின்றனர் என்று பிரதமர் மோடி பேசினார்.
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவை விரிவு படுத்தப்பட்டு வருகிறது.
சொகுசான வசதிகள், அதிவேகம் என பயணிகளுக்கு சவுகரியம் அளிக்கும் பல சலுகைகள் இந்த ரயிலில் உள்ளன. பயணிகள் மத்தியிலும் வந்தே பாரத் ரயில் சேவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எதிர்க்கட்சிகளை சாடிய மோடி
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் போபாலில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:- நிகழ்ச்சியில் பேசும்போது, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார். கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்தே எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என சிலர் வேலைசெய்து கொண்டு இருக்கின்றனர்.

மோடியின் புகழை களங்கப்படுத்த
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குறிப்பிட்ட சிலருடன் இதற்காக ஒப்பந்தம் போட்டுள்ளனர். தொடர்ந்து மோடியின் புகழை களங்கப்படுத்த முயற்சித்து வருகின்றனர். ஆனால் மோடியின் பாதுகாப்பு கவசமாக ஏழைகள், நடுத்தர மக்கள், பழங்குடியினர், தலித்துகள் பிற்படுத்தப்பட்டவர்கள் என ஒவ்வொரு இந்தியரும் உள்ளனர். முந்தைய அரசுகள் திருப்திப்படுத்தும் அரசியலில் மட்டுமே மும்முரமாக இருந்தது.

முதலிடத்திற்கு கொண்டுவர
அந்த அரசுகள் ஒரு குடும்பத்தை நாட்டின் முதல் குடும்பமாக கருதியது. ஏழை எளிய மக்களை புறக்கணித்தது. ரயில்வேயும் இதற்கும் உதாரணமாக உள்ளது. ரயில்வே துறை மேம்படுத்த வேண்டும் என்று முந்தைய அரசுகள் விரும்பியிருந்தால் செய்து இருக்க முடியும். ஆனால் பாஜக ஆட்சி அமைத்த பிறகே ரயில்வேயின் நவீனமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. உலக அளவில் முதலிடத்தில் கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

தூய்மைக்கு முக்கியத்துவம்
அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்ட்டில் கூட இது பிரதிபலித்தது. ரயில்பாதைகள் மின் மயமாக்குவது ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா, வைஃபை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு நவீன மாயமாக்கும் வசதிகள் மேம்படுத்தப் படுகின்றன. ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. புகார்களுக்கும் உரிய நேரத்தில் தீர்வு காண்பதில் கவனம் காட்டப்படுகிறது. ரயில்வே துறையில் மக்களுக்கு பயண வசதியை ஏற்படுத்துவதே அரசின் நோக்கம்" என்றார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications