காங்.- என்சிபியை மலை போல் நம்பிய சிவசேனா.. ஆதரவு அளிக்க சோனியா மறுப்பு?
Recommended Video
டெல்லி: மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பதை ஏற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறுத்துவிட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக 105 இடங்களும், சிவசேனா 56 இடங்களும், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) 54 இடங்களும் காங்கிரஸ் 44 இடங்களும் பெற்றன. எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
தனிப்பெரும்பான்மைக்கு 146 இடங்கள் தேவை. கூட்டணி கட்சிகளான சிவசேனாவும் பாஜகவும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு கட்சிகளும் ஆட்சி அதிகாரத்தில் போட்டி போட்டு கொண்டு மோதல் போக்கில் உள்ளன.

ஒப்புதல்
இந்த நிலையில் சிவசேனா கட்சி தலைவர்கள் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவை பெற முயற்சித்து வந்தன. இதில் இரு கட்சிகளும் ஆதரவு தருவதாக ஒப்புக் கொண்டதாக சிவசேனா தெரிவித்து வந்தது.

சரத்பவார்- சோனியா
இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் சோனியா காந்தியை என்சிபி தலைவர் சரத் பவார் சந்தித்து பேசினார். அப்போது என்ன பேசினார்கள் என்பது குறித்து தெரியவில்லை.

போதிய ஆதரவு இல்லை
சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த சரத்பவாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் சேனா- பாஜக இடையே உள்ள மோதல் அவர்களது உள்விவகாரமாகும். சிவசேனா எங்களுக்கு எந்தவித உத்தரவாதத்தையும் கொடுக்கவில்லை. மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க எங்களிடம் போதிய பெரும்பான்மை இல்லை. எனவே எதிர்க்கட்சி வரிசையில் அமர தயார் என தெரிவித்தார்.

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
இந்த நிலையில் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பதை சோனியா காந்தி நாசுக்காக சரத்பவாரிடம் மறுத்துவிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உறுதிப்படுத்தப்படாத தகவல் கிடைத்துள்ளதால் இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications