பாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனா உறுதி? தனிமைப்படுத்தப்பட்ட 35 பேர்?
டெல்லி: பாதுகாப்புத் துறை செயலாளர் அஜய் குமாருக்கு புதன்கிழமை கொரோனா உறுதியானதாக தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளரும் கருத்து சொல்ல மறுத்துவிட்டார்.
Recommended Video
பாதுகாப்பு துறை செயலாளராக இருப்பவர் அஜய்குமார். இவருக்கு நேற்று கொரோனா இருப்பது உறுதியானதாக தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து டெல்லியில் ரைசினா ஹில்ஸில் உள்ள சவுத் பிளாக்கில் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் தலைமையிடத்தில் 35 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அஜய்குமாருடன் தொடர்பில் இருந்தோரை கண்டுபிடிக்கும் பணிகளும் விரைவுப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அஜய்குமாருக்கு கொரோனா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
சவுத் பிளாக்கின் முதல் தளத்தில் பாதுகாப்புத் துறை செயலாளர் அலுவலகம், பாதுகாப்புத் துறை அமைச்சக அலுவலகங்கள், ராணுவம் மற்றும் கடற்படைத் தலைவர்களின் அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அலுவலகத்திற்கு வருவதில்லை என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications