புறாவால் நடந்த அக்கப்போர்.. 'கோ ஏர்' விமான பயணிகள் அதிர்ச்சி
டெல்லி: அகமதாபாத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு சென்ற, 'கோ ஏர்' விமானத்தில் இரண்டு புறாக்கள் புகுந்து கொண்டு செய்த அக்கப்போர் இப்போது வைரலாகியுள்ளது.
விமானம் புறப்படுவதே இதனால், சுமார் 30 நிமிடங்கள் தாமதமானது. இந்த சம்பவத்தின் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், விமானத்திற்குள் புறாக்கள் பறப்பதும், விமானத்தில் இருந்த பயணிகள் அதைப் படம் பிடிக்க முயற்சிக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.
இருப்பினும், புறா விமானத்தில் எவ்வாறு நுழைந்தது என்பது இதுவரை தெரியவில்லை. விமானத்தின் கதவைத் திறந்து புறாக்களை விமான ஊழியர்கள் வெளியேற்றினர். இதன்பிறகே விமானம் கிளம்பியது.
கோ ஏர் விமானத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: விமானம் திட்டமிடப்படி நேற்று மாலை 5 மணிக்கு கிளம்ப வேண்டியது. ஆனால், புறா புகுந்ததால், தாமதம் ஏற்பட்டுவிட்டது. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். பயணிகளுக்கு ஏதேனும் அசவுகரியம் ஏற்பட்டிருந்தால், அதற்கு, கோ ஏர் விமானம் வருத்தப்படுகிறது.
இனி இப்படி நடக்காமல் இருக்க விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மாலை 6.15 மணிக்கு ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த இந்த விமானம் மாலை 6:45 மணிக்குதான் தரையிறங்கியது. ஒரு புறாவுக்கு போரா.. பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கிறது என்ற காமெடி டயலாக்கிற்கு ரொம்பவே பொருத்தமான சம்பவம்தான் இது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications