டெல்லியில் பிரதமர் மோடி - ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பு! தொழிலதிபர் அதானியும் சந்தித்தார்!
டெல்லி: இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே 2 நாட்கள் பயணமாக நேற்று இந்தியா வருகை தந்தார். டெல்லியில் இன்று பிரதமர் மோடியை ரணில் விக்கிரமசிங்கே சந்தித்து பேசினார். முன்னதாக தொழிலதிபர் அதானியும் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்தார்.
இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த உடன், இந்தியாவுக்கு அந்நாட்டு ஜனாதிபதி அல்லது பிரதமர் முதல் பயணம் மேற்கொள்வது இதுவரை இருந்து வரும் நடைமுறை.

இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகி அந்நாட்டை விட்டு தப்பி ஓடினர். பின்னர் இலங்கை திரும்பி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளனர். இந்த புரட்சியில் இலங்கை ஜனாதிபதியானார் ரணில் விக்கிரமசிங்கே.
இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு ஆண்டாகியும் இந்தியாவுக்கு ரணில் விக்கிரமசிங்கே வருகை தரவில்லை. இந்திய தரப்பில் மத்திய அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் இலங்கை சென்று வந்தனர். அதே நேரத்தில் இந்தியாவும் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கியது. இன்னொரு பக்கம் சீனாவும் இலங்கைக்கு போட்டி போட்டுக் கடன் வழங்கியது.

இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே நேற்று இந்தியா வருகை தந்தார். டெல்லியில் ரணில் விக்கிரமசிங்கேவை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் வரவேற்றார். பின்னர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை ரணில் விக்கிரமசிங்கே சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் டெல்லியில் இன்று காலை தொழிலதிபர் அதானியை ரணில் விக்கிரமசிங்கே சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை ரணில் விக்கிரமசிங்கே சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இலங்கை பொருளாதார நெருக்கடி, இருதரப்பு உறவு உள்ளிட்டவை தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்தனர்.
ரணில் பேச்சு: பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து ரணில் விக்கிரமசிங்கே கூறியதாவது: இலங்கையில் வரலாற்றில் அண்மையில் ஏற்பட்ட மிகவும் கடினமான காலங்களில் இந்தியா உறுதியான ஆதரவை வழங்கி இருந்தது. இதற்காக பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட இந்தியாவின் ஆச்சரியமளிக்கும் வகையிலான பொருளாதார, உட்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தொடர்பில் பாராட்டுகளைத தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும்பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் பொருளாதார, உட்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பாராட்டுக்குரியவை; ஆச்சரியமளிக்கின்றன. இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications