ஸ்டேன் சாமி.. பொய் கேஸ் போட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை.. குடியரசுத் தலைவருக்கு எதிர்கட்சிகள் கடிதம்
டெல்லி: ஸ்டேன் சாமிக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ய காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை தேவை என்று குடியரசுத் தலைவருக்கு எதிர்கட்சிகள் கூட்டாக கடிதம் எழுதி உள்ளன. முதல்வர் ஸ்டாலின், காங். இடைக்கால தலைவர் சோனியா உள்ளிட்டோர் இந்த கடிதத்தை எழுதி உள்ளனர்.
2018ல் பீமா - கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி அதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் கடந்த ஆண்டு ஸ்டேன் சாமி கைது செய்யப்பட்டார். என்ஐஏ இவருக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்தது. இந்த நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த ஸ்டான் சாமி நேற்று மானம் அடைந்தார்.

பெயில் கிடைக்காமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று மரணம் அடைந்தார். ஸ்டேன் சாமி மரணம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஸ்டேன் சாமி மரணம் குறித்து குடியரசுத் தலைவருக்கு எதிர்கட்சிகள் கூட்டாக கடிதம் எழுதி உள்ளன.
முதல்வர் ஸ்டாலின், காங். இடைக்கால தலைவர் சோனியா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்கன்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, மதசார்பாற்ற ஜனதா தளம் தலைவர் எச்.டி தேவகவுடா, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ், சிபிஐ ராஜா, சிபிஎம் எம்பி சீதாராம் யெச்சூரி ஆகியோர் இந்த கடிதத்தை எழுதி உள்ளனர்.
இந்த கடிதத்தில், ஸ்டேன் சாமிக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ய காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை தேவை. ஸ்டேன் சாமியின் தொடர் சிறை தண்டனைக்கும், அவர் மனித தன்மையற்று நடத்தப்பட்டதற்கு காரணமானவர்களை உங்களின் அரசு உடனடியாக தண்டிக்க வேண்டும்.
இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதோடு பீமா - கொரேகான் வழக்கில் பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக உபா உள்ளிட்ட சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட எல்லோரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
மிக்க வேதனையுடன் இந்த கடிதத்தை நாங்கள் எழுதுகிறோம். கஸ்டடியில் நிகழ்ந்த ஸ்டேன் சாமியின் மரணம் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்று அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications