Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தற்சார்பு திட்டம்.. சிறு-குறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.10000 கோடி நிதி.. நிர்மலா அதிரடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சிறு மற்றும் குறு ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு உதவியாக ரூபாய் 10 ஆயிரம் கோடி அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் முன் முக்கியமான திட்டங்களை அறிவித்தார். அதன்படி 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பதாக அவர் கூறினார். இதை தொடர்ந்து இரண்டு நாட்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொருளாதார திட்டங்களை அறிவித்து வருகிறார்.

Startup will get 10k crore fund says Nirmala Sitharaman

அதன்படி மூன்றாவது நாளாக தன்னிறைவு இந்தியா திட்டத்தின் 3ம் கட்ட சிறப்பு திட்டங்களை இன்று நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார். இன்று விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் குறித்து கவனம் செலுத்துவோம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.

அதில், இந்தியாதான் உலகிலேயே அதிக அளவில் பால் உற்பத்தி செய்கிறது. ஊரடங்கு காரணமாக பால் 20-25% குறைந்துள்ளது. பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 6,400 கோடி மதிப்பிலான இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீன் ஏற்றுமதி மதிப்பை ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டம் போடப்பட்டுள்ளது.

மீண்டும் பிரதமரின் கிசன் சம்பட யோஜன திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் துவங்கப்பட உள்ளன. இதன் காரணமாக ஏராளமானோருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். பொருளாதார சரிவு மீட்க இது உதவியாக இருக்கும்.

கூட்டுறவு சங்கம் மூலம் ஊரடங்கின் போது 560 லட்சம் லிட்டர் பால்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 5.60 லட்சம் லிட்டர் பால் சராசரியாக உற்பத்தி செய்யப்படுகிறது. மீன்வள மேம்பாட்டிற்காக ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மீன்பிடி துறைமுகம், மீன்சந்தைகளுக்கு உள்கட்டமைப்புகளுக்கு ரூ.9,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு உதவியாக ரூபாய் 10 ஆயிரம் கோடி அளிக்கப்படும். இந்த 10 ஆயிரம் கோடி சிறு, குறு உணவு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும். உள்ளூரில் தயாரிப்போம் திட்டத்திற்காக இந்த தொகை செலவிடப்பட உள்ளது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்.குளிர் சாதன கிடங்குகளில் உணவு பொருட்களை பாதுகாப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+