தற்சார்பு திட்டம்.. சிறு-குறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.10000 கோடி நிதி.. நிர்மலா அதிரடி!
டெல்லி: உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சிறு மற்றும் குறு ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு உதவியாக ரூபாய் 10 ஆயிரம் கோடி அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் முன் முக்கியமான திட்டங்களை அறிவித்தார். அதன்படி 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பதாக அவர் கூறினார். இதை தொடர்ந்து இரண்டு நாட்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொருளாதார திட்டங்களை அறிவித்து வருகிறார்.

அதன்படி மூன்றாவது நாளாக தன்னிறைவு இந்தியா திட்டத்தின் 3ம் கட்ட சிறப்பு திட்டங்களை இன்று நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார். இன்று விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் குறித்து கவனம் செலுத்துவோம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.
அதில், இந்தியாதான் உலகிலேயே அதிக அளவில் பால் உற்பத்தி செய்கிறது. ஊரடங்கு காரணமாக பால் 20-25% குறைந்துள்ளது. பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 6,400 கோடி மதிப்பிலான இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீன் ஏற்றுமதி மதிப்பை ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டம் போடப்பட்டுள்ளது.
மீண்டும் பிரதமரின் கிசன் சம்பட யோஜன திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் துவங்கப்பட உள்ளன. இதன் காரணமாக ஏராளமானோருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். பொருளாதார சரிவு மீட்க இது உதவியாக இருக்கும்.
கூட்டுறவு சங்கம் மூலம் ஊரடங்கின் போது 560 லட்சம் லிட்டர் பால்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 5.60 லட்சம் லிட்டர் பால் சராசரியாக உற்பத்தி செய்யப்படுகிறது. மீன்வள மேம்பாட்டிற்காக ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மீன்பிடி துறைமுகம், மீன்சந்தைகளுக்கு உள்கட்டமைப்புகளுக்கு ரூ.9,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு உதவியாக ரூபாய் 10 ஆயிரம் கோடி அளிக்கப்படும். இந்த 10 ஆயிரம் கோடி சிறு, குறு உணவு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும். உள்ளூரில் தயாரிப்போம் திட்டத்திற்காக இந்த தொகை செலவிடப்பட உள்ளது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்.குளிர் சாதன கிடங்குகளில் உணவு பொருட்களை பாதுகாப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications