94% தவறான ரிசல்ட் வருது.. 2 நாளைக்கு ரேபிட் கிட் டெஸ்ட் வேண்டாம்.. ஐசிஎம்ஆர் அதிரடி
94% தவறான ரிசல்ட்தான் வருது.. 2 நாளைக்கு ரேபிட் கிட் டெஸ்ட் வேண்டாம்.. ஐசிஎம்ஆர் அதிரடி அறிவிப்பு
டெல்லி: அடுத்த இரண்டு நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட் பயன்படுத்த வேண்டாம் என்று, அனைத்து மாநிலங்களையும், ஐசிஎம்ஆர் கேட்டுக் கொண்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை துரிதமாக கண்டறிவதற்கு சீனாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது ரேபிட் டெஸ்ட் கிட் உபகரணம். ஆனால் அது தவறுதலாக ரிசல்ட் காட்டுகிறது என்று மேற்கு வங்க அரசு ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது.
இன்று ராஜஸ்தான் அரசும் இதே போன்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து, ஐசிஎம்ஆருக்கு கடிதம் எழுதியிருந்தது.

அமைச்சர்
ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரகு ஷர்மா, இது பற்றி கூறுகையில், இந்த கிட்ஸ், துல்லியத்தன்மை வெறும், 5.4 சதவீதம் மட்டுமே. 90% அளவுக்காவது சரியான ரிசல்ட் கொடுக்கும் என்பதுதான் உறுதி மொழியாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. பெரும்பாலும் தப்பான ரிசல்ட்தான் வருகிறது.

குழு கண்டுபிடிப்பு
இந்த கருவியின் துல்லிய தன்மை பற்றி ஆய்வு செய்வதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருந்தியல் மற்றும் மைக்ரோபயாலஜி துறையை சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழு ஆய்வு செய்தபோது தான் இந்த தகவல் தெரியவந்தது. அந்த கமிட்டி கொடுத்த பரிந்துரையை அடுத்து நாங்கள் உடனடியாக ரேபிட் கிட் மூலமாக பரிசோதனை செய்வதை நிறுத்தி விட்டோம் என்று தெரிவித்தார்.

2 நாட்கள் வேண்டாம்
இந்த நிலையில்தான் அடுத்த இரண்டு நாட்களுக்கு எந்த மாநிலமும் துரித பரிசோதனை கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று ஐசிஎம்ஆர் சார்பில் கங்காதர் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த கருவியை 20 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக வெப்பநிலை உள்ள பகுதியில் வைத்து பாதுகாக்க வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள இடத்தில் வைத்திருந்தால் சரியாக முடிவுகளை காட்டாது என்பது போன்ற சில நிபந்தனைகளை ஐசிஎம்ஆர் தெரிவித்து இருந்தது.

தமிழகமும் நிறுத்தம்
மாநிலங்களில் இதுபோன்ற நிபந்தனைகளைப் பின்பற்றி சோதனை நடத்தினார்களா, இல்லையா என்பதுபற்றி ஐசிஎம்ஆர் அடுத்த இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்தும் என்று தெரிகிறது. இந்த ஆய்வுக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை ஐசிசிஎம் அறிவிக்கும். தமிழகத்திலும் ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை கருவிகளை கொண்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவும் அடுத்த இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்படும் என்று தெரிகிறது
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications