பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட ராமானுஜர் சிலை சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது! பின்னணி தகவல்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியால் உலகிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ராமானுஜர் சிலை சீனாவில் ரூ 135 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது.
Recommended Video
வைணவ ஆச்சாரியரான ராமானுஜரின் ஐம்பொன்னால் ஆன 216 அடி உயர சிலையை இன்றைய தினம் ஹைதராபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த சிலை ரூ 1000 கோடியில் உருவாக்கப்பட்டது.
ஹைதராபாத் விமான நிலையம் அருகே 45 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையை சுற்றி 108 திவ்ய திருத்தலங்களின் மாதிரி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலம் மை குரூப் நிறுவனத்தின் ஜுப்பாலி ராமேஸ்வர ராவ் என்பதால் தானமாக வழங்கப்பட்டது.

ரூ 135 கோடி
ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ராமானுஜரின் 1000ஆவது ஆண்டு பிறந்த தினத்தையொட்டி இந்த சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலை சீனாவில் ரூ 135 கோடியில் வடிவமைக்கப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு இந்த சிலையை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தின் போது இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனமும் ரேஸில் இருந்தது.

15 மாதங்கள்
ஆயினும் இந்த ஒப்பந்தம் சீன நிறுவனமான ஏரோசன் கார்பரேஷனுக்கு கொடுக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ 135 கோடியாகும். இந்த சிலையை வார்க்கும் பணிகள் சீனாவில் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு வார்க்கப்பட்டு 1600 துண்டுகளாக சிலை இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. இதை நிறுவும் பணிகள் 2017- 2018 ஆம் ஆண்டு சுமார் 15 மாதங்கள் நடைபெற்றன.

ஐம்பொன்னால் ஆனது
வெள்ளி, செம்பு, தங்கம், துத்தநாகம், டைட்டானியம் ஆகிய ஐம்பொன்களால் ஆன இந்த சிலையில் 80 சதவீதம் செம்பு உள்ளது. 216 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளதால் இது இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சிலையாக விளங்குகிறது. எனினும் இந்த சிலையை வார்க்கும் பணிகளுக்கு இந்திய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்காமல் சீனாவுக்கு கொடுத்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 மாடல்கள்
ஸ்ரீ ராமானுஜ சஹஸ்ராப்தி ஒருங்கிணைப்பாளர்களின் சார்பாக மை குரூப் நிறுவனத்தின் தலைவர் ஜுப்பாலி ராமேஸ்வர ராவ் சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஸ்ரீராமானுஜர் சிலையை வடிவமைக்க ஆகமவிதிகளின் படி ஆரம்பத்தில் 14 மாடல்கள் பெறப்பட்டு அவற்றில் 3 மாடல்கள் இறுதி செய்யப்பட்டு அவை 3டி ஸ்கேனிங் செய்து பின்னர் சீனாவுக்கு அனுப்பப்பட்டது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications