தெருநாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டு.. பிடிக்கப்பட்ட இடத்திலேயே விட வேண்டும்! -உச்சநீதிமன்றம்
டெல்லி: தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், இன்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதில் ரேபீஸ் பாதிப்பு இல்லாத நாய்களை தவிர மற்ற நாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டு, பிடிக்கப்பட்ட பகுதியிலேயே விட்டுவிட வேண்டும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

நீதிபதிகள் பிறப்பித்திருக்கும் உத்தரவில், "தெருநாய்களுக்கு கட்டாயமாக கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும். எந்த தெருக்களிலிருந்து நாய்கள் பிடிக்கப்படுகிறதோ, அதே தெருக்களில் நாய்கள் விடப்பட வேண்டும். பிடிக்கப்பட்ட நாய் வெறி பிடித்திருந்தால் அதை மீண்டும் தெருக்களில் விடக்கூடாது" என்று கூறப்பட்டிருக்கிறது.
முன்னதாக கடந்த 11ம் தேதி இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது கொடுக்கப்பட்ட உத்தரவுகள் நாடு முழுவதும் நாய் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
பழைய உத்தரவில் சொல்லப்பட்டிருப்பது
"1. டெல்லி என்.சி.டி., டெல்லி மாநகராட்சி (எம்சிடி), மற்றும் புது டெல்லி மாநகராட்சி (என்.டி.எம்.சி) ஆகியவை உடனடியாக நாய்கள் காப்பகங்களை உருவாக்கி, 8 வாரங்களுக்குள் டெல்லி என்.சி.டி முழுவதும் உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த காப்பகங்களில் கருத்தடை செய்யப்பட்ட மற்றும் தடுப்பூசி போடப்பட்ட தெருநாய்களுக்கும், அங்கே வைத்து பராமரிக்கப்படும் நாய்களுக்கும் போதுமான பணியாளர்கள் இருக்க வேண்டும். எந்த நாயும் வெளியில் விடப்படவோ அல்லது தப்பிக்கவோ இல்லை என்பதை உறுதிப்படுத்த சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்.
நாய்களுக்கான காப்பகங்கள்
2. இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்பதால், நாய்கள் காப்பகங்களின் எண்ணிக்கையை காலப்போக்கில் அதிகரிக்க வேண்டும். டெல்லி என்.சி.டி., எம்சிடி, மற்றும் என்.டி.எம்.சி ஆகியவை அடுத்த 6-8 வாரங்களில் 5,000 நாய்களுக்கான காப்பகங்களைத் தொடங்க வேண்டும். நகரத்தின் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளிலிருந்தும் தெருநாய்களை விரைவில் பிடிக்கத் தொடங்க வேண்டும்.
எதிர்ப்பு தெரிவித்தால் நடவடிக்கை
இதை எவ்வாறு செய்வது என்பது அதிகாரிகளுக்குத் தெரியும், தேவைப்பட்டால் ஒரு சிறப்புப் படையை உருவாக்க வேண்டும். நகரத்திற்குள் மற்றும் புறநகர்ப் பகுதிகளை தெருநாய்கள் அற்றதாக மாற்றுவது முதன்மையான பணியாக இருக்க வேண்டும். இந்தப் பணியில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது. நாய்களைப் பிடிப்பதற்கு எந்த தனிநபரோ அல்லது அமைப்போ தடையாக இருந்தால், அது குறித்து நீதிமன்றத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டால், அத்தகைய எதிர்ப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுநலனைக் கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பச்சிளங்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகள் எந்த காரணத்திற்காகவும் வெறிநாய்களுக்கு பலியாகக்கூடாது. தெருநாய்களின் கடிக்கு அஞ்சாமல் சாலைகளில் சுதந்திரமாக நடமாடலாம் என்ற நம்பிக்கையை இந்த நடவடிக்கை ஏற்படுத்த வேண்டும். இந்த முழு செயல்முறையிலும் எந்த உணர்ச்சிகளும் சம்பந்தப்படக்கூடாது. இது செயல்முறையின் முதல் படியாக இருக்க வேண்டும்.
நீதிமன்ற அவமதிப்பு
3. எம்சிடி/என்.டி.எம்.சி மற்றும் நொய்டா, காஜியாபாத், மற்றும் குருகிராம் ஆகிய இடங்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தினசரி பிடிக்கப்பட்டு காப்பகங்களில் அடைக்கப்படும் தெருநாய்களின் பதிவை பராமரிக்க வேண்டும். இத்தகைய பதிவு அடுத்த விசாரணை தேதியில் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். முக்கியமாக, எந்த ஒரு தெருநாயும் பிடிக்கப்பட்ட பின் மீண்டும் விடப்படக்கூடாது. அவ்வாறு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
4. நாய்க்கடி வழக்குகளைப் பதிவு செய்ய ஒரு வாரத்திற்குள் ஒரு உதவி மையத்தை உருவாக்க வேண்டும். புகார் கிடைத்த 4 மணி நேரத்திற்குள் நாயைப் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிநபரோ அல்லது அமைப்போ இதற்குத் தடை செய்தால், அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பிடிக்கப்பட்ட நாய் விதிகளின்படி கருத்தடை செய்யப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டு, எந்த சூழ்நிலையிலும் விடப்படக்கூடாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ வசதிகளைத் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான அறிக்கை அடுத்த விசாரணையில் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
தடுப்பூசி
5. தடுப்பூசிகளின் இருப்பு ஒரு பெரிய கவலையாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்பூசிகள், அதன் கையிருப்பு மற்றும் தடுப்பூசி கோரியவர்களின் விவரங்களை வழங்க வேண்டும். இந்த உத்தரவுகளைச் செயல்படுத்துவதில் எந்த தனிநபரோ அல்லது அமைப்போ இடையூறு ஏற்படுத்தினால், அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என பழைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications