நான்தான் பிரதமரின் மாமியார்.. சுதா மூர்த்தியை நம்ப மறுத்த இமிகிரேஷன் அதிகாரிகளால் பரபரப்பு
டெல்லி: நான்தான் இங்கிலாந்து பிரதமரின் மாமியார் என கூறியவுடன் விமான நிலைய அதிகாரிகள் என்ன ஜோக் அடிக்கிறீர்களா என கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்போசிஸ் நாராயண மூர்த்தி மற்றும் அவருடைய மனைவி சுதா மூர்த்தி (72). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகள் அக்ஷதா மூர்த்தி, பிரிட்டன் பிரதமரும் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக்கின் மனைவியாவார்.

இந்த நிலையில் சுதா மூர்த்தி பிரபலமான தி கபில் சர்மா ஷோவில் கலந்து கொண்டார். அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில் ஒரு முறை நான் லண்டன் சென்றிருந்தேன். அப்போது லண்டனில் இமிகிரேஷன் அதிகாரி எனது குடியிருப்பு முகவரியைக் கேட்டு அதற்கான படிவத்தில் எழுத வேண்டும் என கேட்டிருந்தார்.
அப்போது என்னுடன் எனது மூத்த சகோதரியும் இருந்தார். நான் லண்டனில் இருக்கும் எனது மகன் வீட்டு முகவரியை எழுத வேண்டும் என நினைத்தேன். ஆனால் எனக்கு அவருடைய முகவரி நினைவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் மகளுடைய முகவரியை எழுத முடிவு செய்தேன். நான் எனது மகளின் முகவரியை எழுதியவுடன் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

நான் எழுதிய முகவரி 10 டவுனிங் ஸ்ட்ரீட் என எழுதியிருந்தேன். இது பிரிட்டன் பிரதமரின் முகவரியாகும். இதை பார்த்ததும் என்ன ஜோக் செய்கிறீர்களா என விமான நிலைய அதிகாரிகள் கேட்டனர். அதற்கு நான் சொன்னேன், நான் பிரிட்டன் நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் என்றும் என்னுடைய மகள் அக்ஷதா சுனக் அவருடைய மனைவி என்றும் கூறினேன். இவ்வாறு ரிஷி சுனக்கின் மாமியார் தெரிவித்துள்ளார்.
72 வயதுடைய சுதா மிகவும் எளிமையான தோற்றத்தில் இருப்பார். இதனால் விமான நிலைய அதிகாரிகளுக்கு அவர் பிரதமரின் மாமியார் என்பதை ஏற்க முடியாமல் போயிருக்கலாம். சுதா மூர்த்திக்கு அண்மையில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மபூஷன் வழங்கப்பட்டது. அவருடைய சேவைகளை பாராட்டி வழங்கப்பட்டது. அண்மையில் நடந்த விழாவில் சுதா மூர்த்தி பேசுகையில் நான் எனது கணவரை தொழிலதிபர் ஆக்கினேன்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பிறகு ஒரு பெண் இருக்கிறாள் என்பதற்கு உதாரணம் இது. அது போல் என்னுடைய மகள் அவரது கணவரை பிரிட்டன் நாட்டின் பிரதமராக்கினார். பாருங்கள் பெண் நினைத்தால் அவருடைய கணவரை எப்படி வேண்டுமானாலும் முன்னேற வைக்க முடியும் என கூறியிருந்தார். மேலும் தனது மருமகன் வியாழக்கிழமைகளில் ராகவேந்திரருக்கு விரதம் இருப்பார் என்றும் எந்த நல்லதையும் அவர் வியாழக்கிழமைகளில் தொடங்கி வைப்பார் என்றும் தெரிவித்திருந்தார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications