80 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம்.. கட்டாயமல்ல- சுனில் அரோரா
டெல்லி: 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு அளிக்கும் முறை இந்த தேர்தலில் அமல்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த நடைமுறை கட்டாயமல்ல, வாக்காளர் விருப்பப்பட்டால் இதை தேர்வு செய்யலாம் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
தமிழகம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுவை, கேரளா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதி குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் வாக்காளர்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியமானது.

கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு வாக்களிக்கும் நேரம் 5 மாநிலங்களிலும் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. ஆனால் இது கட்டாயமல்ல.
விருப்பமுள்ளவர்கள் தபால் வாக்கு அளிக்கலாம். விருப்பம் அல்லாதவர்கள் வாக்குப் பதிவு மையத்திற்கே வந்து வாக்களிக்கலாம் என்றார் அரோரா. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு என்ற நடைமுறை பீகார் சட்டசபைத் தேர்தலில் அமல்படுத்தப்பட்டது.
இதே முறையை தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல்களிலும் நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் உத்தேசித்திருந்தது. ஆனால் இந்த நடைமுறையை பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதில் வெளிப்படைத்தன்மை இருக்காது என இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
-
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications