10 ஆண்டு பழைய வாகனம் வைத்திருப்போருக்கு ஆப்பு? உச்ச நீதிமன்றம் மிக முக்கிய உத்தரவு
டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இதனால் அங்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பிஎஸ் 3 அல்லது அதற்கு முந்தைய பழைய வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசு பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலங்களில் இதுவே நிலைமையாக இருக்கிறது. இதனால் டெல்லிவாசிகளுக்கு ஏர் பியூரிபையர்களும் மாஸ்குகளும் அத்தியாவசியமான ஒன்றாகவே மாறிவிட்டது. இந்தாண்டு காற்று மாசு மிகக் கடுமையான நிலைக்குப் போய்விட்ட நிலையில், அங்குப் பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கு
இதற்கிடையே அங்கு இயங்கும் பிஎஸ் IVக்கு முந்தைய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லியின் காற்று மாசு நிலையைக் குறிப்பிட்ட டெல்லி அரசு, உச்ச நீதிமன்ற முந்தைய உத்தரவில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதாவது முந்தைய உத்தரவில் பழைய வாகனங்கள் வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
கோரிக்கை
இருப்பினும், காற்று மாசு மோசமாகிவிட்ட நிலையில், இந்த உத்தரவில் திருத்தம் செய்யுமாறு டெல்லி அரசு கோரிக்கை வைத்தது. டெல்லி அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, பிஎஸ்-III வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரினார். பழைய வாகனங்களின் இருந்து வெளியேறும் கார்பன் மிக அதிகமாக இருப்பதாகவும் காற்று மாசு அதிகரிக்க அதுவே பிரதானக் காரணம் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.
அனுமதி
இந்தக் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தனது ஆகஸ்ட் 12ஆம் தேதி உத்தரவை மாற்றியமைத்தது. இது தொடர்பாக நீதிபதிகள் "10 ஆண்டுகள் பழமையான டீசல் அல்லது 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் பிஎஸ்-IVஆக இருந்தால் மட்டுமே கடுமையான நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது" எனத் தெளிவுபடுத்தினர்.
என்ன நடக்கும்!
அதாவது நீதிமன்றம் தனது முந்தைய உத்தரவில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் அல்லது 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது எனக் கூறியிருந்தது. ஆனால், இப்போது பழைய வாகனங்களாக இருந்தாலும் பிஎஸ் IV வாகனங்கள் மீது மட்டுமே நடவடிக்கை இருக்காது. பிஎஸ் 3 அல்லது அதற்கு முந்தைய வாகனங்களை வைத்திருப்போர் மீது டெல்லி அரசு நடவடிக்கை எடுக்க முடியும். டெல்லியில் காற்று மாசு மிக மோசமான அளவை எட்டிய நிலையில், நீதிமன்றம் தனது உத்தரவை மாற்றி அமைத்தது.
டெல்லியைப் பொறுத்தவரை அங்குக் காற்று மாசு உச்சத்தில் இருக்கிறது. இதனால் அங்குக் கட்டுமானத்திற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளிலும் 5ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளே நடத்தப்படுகிறது. அங்குக் காற்று மாசு ஏற்பட வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையும் முக்கிய காரணமாக இருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டே டெல்லி அரசு பழைய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications