Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையேயான புதிய மோதல்.." உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: என்சிஇஆர்டி (NCERT) 8ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏதோ நீதித்துறையில் மட்டுமே ஊழல் மலிந்து இருப்பது போலத் திட்டமிட்டுச் சித்தரிக்க முயற்சி நடப்பதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

என்சிஇஆர்டி என்று அழைக்கப்படும் National Council of Educational Research and Training கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பாகும். சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் மாநில போர்டுகளுக்கும் தேசியப் பாடத்திட்டங்களை இந்த என்சிஇஆர்டி தான் வடிவமைக்கிறது.

Supreme court CJI Surya Kant Slams Corruption in Judiciary Chapter in NCERT Book Mention Attack

நீதித்துறையில் ஊழல்

இந்த அமைப்பு 1 முதல் 12 வரை வகுப்பிற்கு அறிவியல், கணிதம், சமூக அறிவியல் போன்ற பாடங்களின் புத்தகங்களை வெளியிடுகிறது. அவை சிபிஎஸ்இ, மாநில பாடத்திட்டங்கள் எனப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி சமீபத்தில் 8ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் வெளியிடப்பட்டது. அதில் நீதித்துறையில் சவால் என்ற பாடத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற பகுதி சேர்க்கப்பட்டு இருந்தது.

அதேபோல இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் சில கருத்துகள் இதில் இடம்பெற்றுள்ளது. மேலும், இதில் நீதித்துறை தொடர்பாகவும் நீதிமன்றங்களில் ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பாகவும் விளக்கங்கள் தரப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

முறையீடு

இது தொடர்பாகத் தலைமை நீதிபதி அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி முறையீடு செய்தனர். இந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அப்போது "நீதித்துறை ஊழல்" எனக் குறிப்பிடப்பட்டதற்கு, தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். இதை நீதித்துறை மீதான "திட்டமிட்ட, ஆழமான தாக்குதல்" எனக் குறிப்பிட்ட அவர், நீதித்துறையின் நேர்மையை அவதூறு செய்யவோ, கேள்வி கேட்கவோ உச்ச நீதிமன்றம் யாரையும் அனுமதிக்காது என்றார்.

கவலை

இந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என அறிவித்தார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்படப் பலரிடமிருந்து இந்த விவகாரம் குறித்து தனக்கு அழைப்புகள் வந்ததாகவும் அவர் தெரிவித்தார்..

அப்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும், "நீதித்துறை ஊழல்" பாடம் சேர்க்கப்பட்டதால் வழக்கறிஞர் சங்கத்தினரும் வேதனை அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகளின் ஊழல்களைக் குறிப்பிடாமல், நீதித்துறை மட்டும் குறிவைக்கப்படுவதாக அபிஷேக் சிங்வி வாதிட்டார்.

அனுமதிக்க மாட்டோம்

அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே இது புதிய மோதல் என்றார் தலைமை நீதிபதி சூர்ய காந்த், "இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்குக் காரணமானோர் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதித்துறை மீதான தாக்குதலை உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது. நீதித்துறையில் ஊழல் மலிந்துள்ளது என்று பாடப்புத்தகத்தில் சேர்த்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது. இந்த விவகாரத்தை அணுக வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.

திட்டமிட்டு இதுபோன்ற ஒரு பகுதி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் நோக்கம் எங்களுக்குத் தெரியும். நீதித்துறையில் மட்டுமே ஊழல் இருப்பது போலச் சித்தரிக்க முயற்சி நடக்கிறது" என்றார்.

நீக்கம்

உச்ச நீதிமன்ரம் நேரடியாக அதிருப்தி தெரிவித்து இதுபோன்ற கருத்துகளை கூறியது பெரும் பரபரப்பை கிளப்பியது. இதற்கிடையே அந்த குறிப்பிட்ட பாடத்திட்டத்தை நீக்க என்சிஆர்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+