பசுமை பட்டாசுகள் தயாரிக்க வேண்டியது தானே? சிவகாசி பட்டாசு ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி
டெல்லி: பசுமை பட்டாசுகள் தயாரிக்க வேண்டியது தானே என்று சிவகாசி பட்டாசு ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிப்பதில் பல்வேறு நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்திருக்கிறது. குறிப்பாக.. பட்டாசு தயாரிக்க பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளை பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையும் உள்ளது.

ஆனால், பேரியம் நைட்ரேட் மூலமே சங்கு சக்கரம், பென்சில், புஸ்வாணம் உள்ளிட்ட குழந்தைகளுக்கான பட்டாசுகளை தயாரிக்க முடியும். அதேநேரத்தில் பசுமை பட்டாசு என்றால் என்ன என்பதை மத்திய அரசு இதுவரை எதையும் அடையாளம் காட்டவில்லை என்று பட்டாசு தயாரிப்பாளர்கள் கூறி வந்தனர்.
மேலும் இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப் பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்,900க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் 4 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்றார்.
அப்போது நீதிபதிகள், ஏற்கனவே நீதிமன்றம் வகுத்த வழிகாட்டுதல் படி பசுமை பட்டாசு தயாரிக்க ஆலைகள் ஒப்புதல் பெற்றுள்ளதா என்று வினவினர். தற்போது பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு தொழில் நலிந்துள்ளது என்று கூறுவது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications