இன்னும் 15 நாள் காத்திருக்கலாமே.. ஒமர் அப்துல்லா கைதுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
டெல்லி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை (1978ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்புச் சட்டத்தின்) 'பிஎஸ்ஏ' கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு, எதிராக ஹேபியஸ் கார்பஸ் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், ஆட்கொணர்வு மனு என்பதால், விரைந்து விசாரிக்க வேண்டும் என்று விடுத்த, கோரிக்கையை ஏற்க மறுத்த அந்த அமர்வு 15 நாட்களுக்கு முன்பாக இதை விசாரிக்க முடியாது என கூறி, வழக்கை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆட்கொணர்வு மனுவை, ஓமர் அப்துல்லா சகோதரி, சாரா பைலட் தாக்கல் செய்திருந்தார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய்பபட்ட பிறகு அரசியல் தலைவர்கள் கைது செய்யப்டடதாகவும், ஒமர் அப்துல்லாவின் தடுப்புக்காவல் ஆரம்பத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 107 ன் கீழ் இருந்ததாகவும் பிப்ரவரி 5ம் தேதி முதல்தான், பிஎஸ்ஏ சட்டத்தில் காவலில் வைக்கப்பட்டது என்றும் கபில் சிபல் வாதிட்டார்.
ஆனால், இந்த வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாக, நீதிபதி அருண் மிஸ்ரா தெரிவித்தார். ஆனால், இது ஆட்கொணர்வு மனு. அவசர தேவையுள்ளதாலும், ஒருவரின் சுதந்திரம் தொடர்புள்ளது என்பாதலும், 3 வாரங்கள் வரை தள்ளி வைப்பது சரியல்ல என்று குறுக்கிட்டார்.
இதையடுத்து கால அவகாசத்தை குறைத்துக்கொண்ட நீதிபதி, மார்ச் 2ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
நீதிபதி மிஸ்ரா கூறுகையில், நீங்கள் வெகு காலமாக காத்திருந்தீர்கள், வழக்கு தொடர ஒரு வருடம் காத்திருந்தீர்கள் என்றார். அப்போது குறுக்கிட்ட கபில் சிபல், வழக்கு தொடர ஓராண்டு காத்திருக்கவில்லை, ஏனெனில், நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளது, தடுப்பு காவல் பற்றி கிடையாது. பிஎஸ்ஏ சட்டத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிராகத்தான் இப்போது வழக்கு தொடுத்துள்ளோம் என்றார்.
ஆனால், ஏற்கனவே நீண்ட காலம் ஓமர் அப்துல்லா சகோதரி காத்திருக்கும் நிலையில், இன்னும் 15 நாட்கள் காத்திருப்பது பெரிய வித்தியாசத்தை தராது என கூறிய நீதிபதி மார்ச் 2ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications