ராஜீவ் கொலை.. 7 தமிழர்கள் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு.. 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போது, கொலையான 14 பேரின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில், தேர்தல் பிரச்சாரத்தின்போது, 1991ம் ஆண்டு மே 21-ம் தேதி மனித வெடிகுண்டு தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அப்போது அவருடன் கூட்டத்தில் பங்கேற்ற 14 பேரும் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள 7 தமிழர்களை, 25 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ளதால், விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அமைச்சரவையின் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல், ஆளுநர் காலம் தாழ்த்தி வரும் நிலையில் ஏழு பேரையும் விடுதலை செய்ய கூடாது என்று, அந்த சம்பவத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினர், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
அந்த வழக்கு குறித்து மத்திய அரசின் பதிலை உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது. மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் பல்வேறு பிழைகள் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து இன்று உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மேலும் இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications