மாவோயிஸ்டுகள் தொடர்பு: பேரா. சாய்பாபா விடுதலை உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
டெல்லி: மாவோயிஸ்டுகளுடனான தொடர்பு வைத்திருந்த வழக்கில் மாற்றுத் திறனாளி பேராசிரியார் சாய்பாபா விடுதலை செய்யப்பட்டதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பான மகாராஷ்டிரா அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நாளை காலை விசாரிக்க உள்ளது.
டெல்லி பல்கலைக் கழக பேராசிரியராக பணிபுரிந்த சாய்பாபா, 2014-ம் ஆண்டு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஊபா எனப்படும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மாவோயிஸ்டுகளின் தலைவர்களில் ஒருவரான முப்பல்ல லட்சுமண ராவுடன் நெருங்கிய தொடர்பில் சாய்பாபா இருந்தார் என்பது குற்றச்சாட்டு. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவராக இருந்த ஹேம் மிஸ்ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சாய்பாபாவுக்காக மாவோயிஸ்டுகளுடன் தாம் தகவல் பரிமாற்றம் மேற்கொண்டதாக கூறியிருந்தாராம். அதன் அடிப்படையில் பேராசிரியர் சாய்பாபா கைது செய்யப்பட்டார்.

டெல்லி பேராசிரியர் சாய்பாவுடன் பத்திரிகையாளர் உட்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அனைவரும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். பேராசிரியர் சாய்பாபாவுடன் கைது செய்யப்பட்டோரில் ஒருவர் மரணம் அடைந்துவிட்டார். இந்த வழக்கில் பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் சாய்பாபா உள்ளிட்ட 5 பேரை இன்று மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் நீதிபதிகள் ரோஹித் தியோ, அனில் பன்சாரோ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விடுதலை செய்து உத்தரவிட்டது. 8 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பின்னர் பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்டோருக்கு விடுதலை கிடைத்தது.
ஆனால் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் பிறப்பித்த சாய்பாபா உள்ளிட்டோரை விடுதலை செய்யும் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி உடனடியாக உச்சநீதிமன்றத்தை மகாராஷ்டிரா அரசு அணுகியது. இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், சாய்பாபா உள்ளிட்டோர் விடுதலைக்கு தடை விதிக்கவும் மறுத்தது. அதேநேரத்தில் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவாக தாக்கல் செய்யலாம்; அந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நாளை காலை 11 மணிக்கு விசாரிக்கும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications