மாவோயிஸ்டுகள் தொடர்பு: பேரா. சாய்பாபா விடுதலை உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
டெல்லி: மாவோயிஸ்டுகளுடனான தொடர்பு வைத்திருந்த வழக்கில் மாற்றுத் திறனாளி பேராசிரியார் சாய்பாபா விடுதலை செய்யப்பட்டதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பான மகாராஷ்டிரா அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நாளை காலை விசாரிக்க உள்ளது.
டெல்லி பல்கலைக் கழக பேராசிரியராக பணிபுரிந்த சாய்பாபா, 2014-ம் ஆண்டு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஊபா எனப்படும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மாவோயிஸ்டுகளின் தலைவர்களில் ஒருவரான முப்பல்ல லட்சுமண ராவுடன் நெருங்கிய தொடர்பில் சாய்பாபா இருந்தார் என்பது குற்றச்சாட்டு. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவராக இருந்த ஹேம் மிஸ்ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சாய்பாபாவுக்காக மாவோயிஸ்டுகளுடன் தாம் தகவல் பரிமாற்றம் மேற்கொண்டதாக கூறியிருந்தாராம். அதன் அடிப்படையில் பேராசிரியர் சாய்பாபா கைது செய்யப்பட்டார்.

டெல்லி பேராசிரியர் சாய்பாவுடன் பத்திரிகையாளர் உட்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அனைவரும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். பேராசிரியர் சாய்பாபாவுடன் கைது செய்யப்பட்டோரில் ஒருவர் மரணம் அடைந்துவிட்டார். இந்த வழக்கில் பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் சாய்பாபா உள்ளிட்ட 5 பேரை இன்று மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் நீதிபதிகள் ரோஹித் தியோ, அனில் பன்சாரோ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விடுதலை செய்து உத்தரவிட்டது. 8 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பின்னர் பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்டோருக்கு விடுதலை கிடைத்தது.
ஆனால் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் பிறப்பித்த சாய்பாபா உள்ளிட்டோரை விடுதலை செய்யும் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி உடனடியாக உச்சநீதிமன்றத்தை மகாராஷ்டிரா அரசு அணுகியது. இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், சாய்பாபா உள்ளிட்டோர் விடுதலைக்கு தடை விதிக்கவும் மறுத்தது. அதேநேரத்தில் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவாக தாக்கல் செய்யலாம்; அந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நாளை காலை 11 மணிக்கு விசாரிக்கும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications