நீதிமன்றத்துக்கு போலீஸ் ஒத்துழைப்பு தருவதில்லை... உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி..!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிபிஐ, ஐ.பி., போலீஸ் போன்ற அமைப்புகள் நீதிமன்றத்துக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மேலும், நீதிபதிகளே மிரட்டப்படும் நிகழ்வுகளும் நடப்பதாக மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விவரம் பின்வருமாறு;

ஜார்கண்ட்

ஜார்கண்ட்

ஜார்கண்ட் மாவட்டத்தின் கூடுதல் நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை வழக்கில் தானாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பான விசாரணையில் முன்னேற்றம் ஏதும் இல்லாததால் அது தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்தினார் நீதிபதி.

ஒத்துழைப்பு இல்லை

ஒத்துழைப்பு இல்லை

மேலும், நாட்டில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளில் குறிப்பாக தாதாக்கள், பெரும் வசதி படைத்தவர்கள்,சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் வழக்கு விசாரணையின் போது நீதிபதிகளே மிரட்ட படுகிறார்கள் என தலைமை நீதிபதி வேதனை தெரிவித்தார். மிரட்டல் தொடர்பாக CBI, POLICE, IB உள்ளிட்டோரிடம் புகார் கொடுத்தாலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை, நீதித்துறைக்கு அவர்கள் ஒத்துழைப்பதே இல்லை என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

 மிரட்டல்

மிரட்டல்

தற்போது இந்தியாவில் புதிய வழக்கமாக ஏதேனும் ஒரு வழக்கில் எதிராக தீர்ப்பு வழங்கிவிட்டால், நீதிபதிகள் குறிவைக்கபடுகிறார்கள். அப்போது மத்திய அரசுடைய தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால், நீதிபதிகள் தாக்கப்படுவது என்பது துரதிருஷ்ட வசமானது எனவும் நீதிபதிகளை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று கூறிய கே.கே வேணுகோபால் நீதிபதிகளுக்கு உரிய பாதுகாப்பு, போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

ஒரு வாரம் கெடு

ஒரு வாரம் கெடு

இதனையடுத்து தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஒரு மாவட்ட நீதிமன்ற நீதிபதி கொல்லப்பட்ட ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாவட்டம் நிலக்கரி மாபியா கும்பலுக்கு பெயர் போன இடம் அப்படியிருந்தும் மாநில நிர்வாகம் நீதிபதிகளுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க தவறியுள்ளது எனவும் இது போன்று நாடு முழுவதும் ஏராளமான சம்பவங்கள் நடந்தேறி வருவதாக கூறினார். எனவே இதுபோன்ற சம்பவங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது எனக்கூறிய தலைமை நீதிபதி ஒரு வாரத்தில் மத்திய அரசு இது குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+